Advertisment

எதிர்நீச்சல் ஜான்சி ராணியா இவர்? வேலு நாச்சியார் வேடத்தில் மிரட்டிடாரே!

அயலி வெப் தொடரில் மைதிலியின் அம்மாவாக நடித்திருந்த இவர், வெந்து தணிந்தது காடு படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Gayathri Krishnan

எதிர்நீச்சல் சீரியல் நடிகை காயத்ரி கிருஷ்ணன்

சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியல் நடிகை காயத்ரி கிருஷ்ணன் வேலு நாச்சியார் வேடமிட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது நம்ம ஜான்சி ராணியா என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் சீரியல் எதிர்நீச்சல். ஆணாதிக்கம் கொண்ட ஒரு குடும்பத்தில் வாழ வரும் படித்த மருமகள்கள் அனுபவிக்கும் கொடுமைகளும் அதை எதிர்த்து அவர்கள் போடுவது குறித்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் ஆணாதிக்கம் படைத்த வில்லனாக ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் மாரிமுத்து மிரட்டி வருகிறார்.

இவரது கேரக்டர் விமர்சனங்களை எதிர்கொண்டாலும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதே சமயம் என்னதான் ஆணாதிக்கம் இவருக்கு அதகமாக இருந்தாலும், இவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் சமீபத்தில் சீரியலில் என்ட்ரி ஆன கேரக்டர் தான் ஜான்சி ராணி. குணசேகரனின் தங்கை ஆதிரையின் கணவன் கரிகாலனின் அம்மா கேரக்டரான ஜான்சி ராணி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை காயத்ரி கிருஷ்ணன்.

இதற்கு முன்பு அயலி வெப் தொடரில் மைதிலியின் அம்மாவாக நடித்திருந்த இவர், வெந்து தணிந்தது காடு படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். சின்னத்திரையில் தொகுப்பாளராக பல வருடங்கள் பணியாற்றிய இவர், சிறுவயதில் இருந்தே படித்து டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக பிஎச்.டி படித்த அவர், திருநங்கைகளின் வாழ்க்கை தொடர்பான ஆய்வு செய்துள்ளார்.

எம்.ஃபில் படிக்கும்போதே முதல் குழந்தைக்கு தாயான இவர், பிஎச்.டி படிக்கும்போது 2-வது முறையாக கர்ப்பமாகியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தே படித்து தனது படிப்பை முடித்த காயத்ரி கிருஷ்ணன், சமீபத்தில் ஒரு மாடலிங் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதில் பெண்கள் பலரும் விதவிதமாக ஆடைகளை அணிந்து கலந்துகொணட நிலையில்,  இவர் வேலு நாச்சியார் வேடமிட்டு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

வித்தியாசமாக முயற்சி செய்த காயத்ரி அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த மாடலின் நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காயத்ரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனக்கு மேக்கப் போட்ட நபருக்கு நன்றிகளையும் கூறி இருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் சின்னத்திரை சொர்ணாக்கா, எங்க வேலுநாச்சியார் ஆக மிரட்டிட்டாரே என்று பலர் வியந்து கமெண்ட்களை கொட்டுகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment