கேரளாவின் கோட்டயத்தில் பிறந்த ரேஷ்மா முரளிதரன், சென்னையில் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு குரோம்பேட்டையில் உள்ள மகளிர் வைஷ்ணவ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
மாடலிங் துறையில் இருந்த ரேஷ்மா ஜீ தமிழ் டிவியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
தொடர்ந்து பூவே பூச்சூட வா சீரியலில் சக்தி எனும் கேரக்டர் மூலம் சின்னத்திரை சீரியலில் என்ட்ரி ஆனார் ரேஷ்மா.
பூவே பூச்சூட வா சீரியலில் அவரின் அக்கா மீனாட்சியின் கணவராக நடித்தவர் தான் மதன். சீரியலில் நடிக்கும்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
ரேஷ்மாவுக்கும், மதனுக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் திருமணம் முடிந்தது. தொடர்ந்து அபி டெய்லர் சீரியலில் இருவரும் நாயகன், நாயகியாக நடித்தனர்.
சமீபத்தில் முடிந்த விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 இல், ரேஷ்மாவும் மதன் பாண்டியனும் கலந்து கொண்டு, பட்டத்தை தட்டிச் சென்றனர்.
தற்போது விஜய் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் ரேஷ்மா நாயகியாக நடித்து வருகிறார். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஆனந்த் பாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.