விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 4-ன் இறுதிப்போட்டிக்கான ஷூட்டிங் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதில் வெற்றியாளர் யார் என்ற தகவல் தற்போது லீக் ஆகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில், ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருந்து வரும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 4-வது சுற்று விரைவில் முடிவடைய உள்ளது. இதில் முதல் சீசனில் வனிதா, 2-வது சீசனில் கனி, 3-வது சீசனில் ஸ்ருதிகா சம்பியன் பட்டம் வென்றனர்.
தற்போது நடைபெற்று வரும் 4-வது சுற்றில், கடந்த 3 சீசன்களில் கோமாளியாக கலக்கிய சிவாங்கிய இந்த சீசனில் குக்காக களமிறங்கிய கலக்கி வருகிறார். இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கான ஷூட்டிங் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதல் ஆளாக விசித்ரா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
அதனைத் தொடர்ந்து, சிவாங்கி, மைம் கோபி, ஸ்ருஷ்டி, கிரண் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற வைல்டு கார்டு சுற்றில் இதுவரை எலிமினேட் ஆன போட்டியாளர்கள் அனைவரும் போட்டியிட்டனர். இதில் அசத்தலாக சமைத்த ஆண்ட்ரியன் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
தற்போது பைனல்ஸுக்கான ஷூட்டிங்கும் நடந்து முடிந்துள்ளதாம். அதில் வெற்றி பெற்றவர் யார் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருந்து வரும் நிலையில், சிவாங்கி அல்லது ஆண்ட்ரியன் ஆகிய இருவரில் ஒருவர் தான் இந்த சீசனின் வெற்றியாளர் என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து இனி வரும் நாட்களில் தெரியவரும். ஒருவேளை சிவாங்கி வெற்றி பெற்றால், அவரின் நீண்ட நாள் கனவு இதன்மூலம் நிறைவேறிவிடும்.
இதில் வெற்றிபெற்றால் தன் கனவு நனவாகிவிடும் என முந்தைய எபிசோடில் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.