Advertisment

திருமணமான 1 வருடத்தில் கணவர் மரணம்: ஆன்மா தன்னை பாதுகாப்பதாக நடிகை ஸ்ருதி உருக்கம்

ராதிகாவுடன் வாணி ராணி, கல்யாண பரிசு, விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியலிகளில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்பரியா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shruti Shanmugapriya

Shruti Shanmugapriya

தமிழ் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த நடிகை ஸ்ருதி சண்முகபிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் திருமணமான ஒரு வருடத்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சன்டிவியின் நாதஸ்வரம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஸ்ருதி சண்முகப்பரியா. தொடர்ந்து ராதிகாவுடன் வாணி ராணி, கல்யாண பரிசு, விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியலிகளில் நடித்து பிரபலமான இவருக்கு சின்னத்திரையில் பல ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இவரது முதல் சீரியலான நாதஸ்வரம் இவருக்கு பலரின் பாராட்டுக்களை பெற்று தந்தது.

சின்னத்திரை மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ள ஸ்ருதி ஷண்முகப்பிரியா, கடந்தாண்டு அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் பங்கேற்று இரண்டாவது வென்றிருந்தார். இவர்களின் திருமணத்தில் சின்னத்திரையில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் பங்கேற்ற நிலையில், இணையத்தில் வெளியான புகைப்படத்தை வைத்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

திருமணத்திற்கு முன்பு சின்னத்திரையில் நடித்து வந்த ஸ்ருதி திருமணத்திற்கு பின் சீரியலில் இருந்து முழுவதுமாக விலகி குடமபத்தை பார்த்துக்கொள்ள தொடங்கினார். இதனிடையே ஸ்ருதிக்கு திருமணமாகி ஒரு வருடமே முடிந்துள்ள நிலையில், ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளாக வெளியான தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அரவிந்த் சேகருக்கு 30 வயதே ஆகும் நிலையில், இவரின் இழப்புக்கு பலர் தங்களின் இரங்கல்களை தெரிவித்து, ஸ்ருதிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இது குறித்து ஸ்ருதி சண்முகப்பரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

பிரிந்தது உடல் தான். ஆனால் உங்கள் ஆன்மாவும் மனமும் என்னைச் சூழ்ந்து இப்போதும் என்றென்றும் பாதுகாக்கிறது! என் அன்பே நிம்மதியாக இருங்கள். உங்கள் மீதான எனது அன்பு இப்போது மேலும் மேலும் அதிகரித்து வருகிறது, நாம் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நிறைய நினைவுகளை வைத்திருந்தோம், அதை நான் வாழ்நாள் முழுவதும் மதிக்கிறேன். உன்னை மிஸ் பண்ணுகிறேன் மேலும் உன்னை நேசிக்கிறேன் அரவிந்த்! என் அருகில் உன் இருப்பை உணர்கிறேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment