Advertisment

கல்லூரி மாணவியாக மாறிய பாக்யா... புலம்பி தவிக்கும் கோபி... உற்சாகத்தில் ரசிகர்கள்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சீரியலின் இன்றைய எபிசோடு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

டிகிரி இல்லை என்பதால் பேங்கில் லோன் தர மறுத்ததால் கல்லூரியில் சேர்ந்து படிக்க நினைக்கும் பாக்யா மகனின் உதவியுடன் இனியா படிக்கும் அதே கல்லூரியில் சேர்ந்துவிட்டார். பாக்யாவின் இந்த முடிவுக்கு வீட்டில் உள்ள அனைவரும் சம்மதிக்க வேறு வழியின்றி இனியாவும் சம்மதிக்கிறாள். இது குறித்து இனியா கோபியிடமும் கூறுகிறார். இதை கேட்ட கோபி அதிர்ச்சியடைந்தாலும், கல்லூரியில் அவலை அனைவரும் கேலி செய்வார்கள் என்று பேசுகிறார்.

இதனால் புலம்பும் கோபி இதை ராதிகாவிடம் போய் சொல்கிறார். இதை கேட்ட ராதிகா, பாக்யா இதில் நீடிக்க மாட்டார் சில நாட்களில் ஓடி வந்துவிடுவார் என்று சொல்கிறார். இதனிடையே, கல்லூரியில் சேர்வதற்காக தான் வாங்க வேண்டிய பொருட்கள் குறித்து தன்னுடைய குடும்பத்தினரிடம் கேட்கும் பாக்யா, தான் முன்கூட்டியே ஒரு பொருளை வாங்கிவிட்டதாக கூறி பென்சில் பாக்சை காட்டுகிறார்.

இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடையும் நிலையில், பென்சில் பாக்ஸ் எல்லாம் எடுத்து செல்லக்கூடாது, பௌச் தான் எடுத்து செல்ல வேண்டும் என்று சொல்லும் இனியா, அம்மாவின் அலப்பறைகளை பொறுக்க முடியாமல் அங்கிருந்து செல்கிறார். ஆனாலும் ஆர்வக்கோளாறில் பாக்யா எழில் ஜெனி ஆகியோரிடம் கருத்து கேட்கிறார். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment