Advertisment

குணசேகரனை அலேக்காக தூக்கிய ஜீவானந்தம் ஆட்கள்... அதிர்ச்சியில் ஜனனி: அடுத்து என்ன?

கோலங்கள் சீரியல் மூலம் முத்திரை பதித்த இயக்குனர் திருச்செல்வம் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருவதோடு மட்டுமல்லாமல் ஜீவாநந்தம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
Ethir Neechal

எதிர்நீச்சல் குணசேகரன்

சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியல் பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், ஜீவானந்தத்தின் ஆட்கள் குணசேகரனை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு வெளியே செல்வதும், ஞானம் மற்றும் கதிரை அடித்து விரட்டுவது போன்ற காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆணாதிக்கம் மிகுந்த ஒரு குடும்பத்தில் வாழும் மருமகள்கள் இதனை எதிர்த்து போராடுவதை விறுவிறுப்பாக திரைக்கதையுடன் கூறி வரும் இந்த சீரியலில் ஆதிமுத்து குணசேகரன் கேரக்டரில் நடிகர் மாரிமுத்து மிரட்டி வருகிறார். இந்த சீரியலின் பெரும் வரவேற்புக்கு இவர்தான் முக்கிய காரணம்.

கோலங்கள் சீரியல் மூலம் முத்திரை பதித்த இயக்குனர் திருச்செல்வம் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருவதோடு மட்டுமல்லாமல் ஜீவானந்தம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் குணசேகரின் சொத்துக்களை ஜீவானந்தம் தனதுபெயருக்கு மாற்றிக்கொண்டார். இதை கேட்க கம்பனிக்கு தனது தம்பிகளுடன் சென்ற குணசேகரனை ஜீவாநந்தம் ஆளை வைத்து மிரட்டுகிறார்.

மேலும் வீட்டில் பெண்களை கொடுமை படுத்துவதும், வெளியில் அவர்களுக்கு உதவி செய்வது போல் நடிப்பது குறித்து குணசேகரனை ஜீவாநந்தம் கடுமையான பேசினார். இதில் ஜனனி ஜீவாநந்தம் கூட்டணி என்று குணசேகரனும் அவரது தம்பிகளும் நினைக்க, ஜீவானந்தம் – குணசேகரன் கூட்டணி என்று ஜனனி நினைக்கிறார். இதனால் ஜீவாநந்தம் உண்மையில் யார் என்று பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே இன்றைய எப்சோடுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஜீவாநந்தத்துடன் குணசேகரன் ஆக்ரோஷமாக கேள்வி கேட்கிறார். அந்த நேரத்தில் கவுதம் உள்ளே வர அவரை பார்த்து ஜனனி ஷாக் ஆகிறார். அப்போது வீடு குறித்து பேசும்போது குணசேகரன் ஒரு ஆணியை கூட புடுங்க முடியாது டா என்று சொல்ல ஜீவானந்தம் கண்ணை காட்டுகிறார்.

அப்போது அவரின் ஆட்கள் குணசேரனை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு வெளியே செல்கின்றனர். இதனால் குணசேகரனின் தம்பிகள் மற்றும் ஜனனி உள்ளிட்ட அனைவரும் பதறுகின்றனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment