Advertisment

ஜான்சி ராணியிடம் சிக்கிய ஆதிரை... குணசேகரன் நண்பராக கோலங்கள் நடிகர் : எதிர்நீச்சல் பரபரப்பு

ஜீவாநந்தம் மீது கொலைவெறியில் உள்ள ஆதி குணசேகரன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து தற்போது சென்னை சென்றுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ethirneechal Serial

எதிர்நீச்சல் சீரியல்

சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்றை எபிசோடு குறித்து வெளியாகியுள்ள ப்ரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். பிரபல நடிகர் மாரிமுத்து ஆதி குணசேகரன் வேடத்தில் கலக்கி வரும் இந்த சீரியலை கோலங்கள் திருச்செல்வம் இயக்கி வருகிறார். நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வரும் இந்த சீரியலில் இந்த வாரம் முழுவதும் ஜீவாநந்தம் யார் என்பதை தெரிந்துகொள்ள ஜனனி ஒரு பக்கம் விசாரணையில் இறங்கியுள்ளார்.

மறுபக்கம், ஜீவாநந்தம் மீது கொலைவெறியில் உள்ள ஆதி குணசேகரன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து தற்போது சென்னை சென்றுள்ளார். இதனிடையோ போலீசாரிடம் விசாரித்து ஜீவாநந்தம் குறித்த தகவல்களை தெரிந்துகொண்ட ஜனனி அவருக்கும் பட்டாவுக்கும் இடையேயான உறவு குறித்து எந்த தகவலையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அடுத்த வாரம் எதிர்நீச்சல் சீரியலில் பரபரப்பான திருப்பம் உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து வெளியான ப்ரமோவில், கடந்த சில நாட்களாக வராமல் இருந்த ஜான்சி ராணி அதிரடியாக என்ட்ரி கொடுக்க  ஆதிரையை எங்க வீட்டுக்கு அனுப்பி விடுங்க நான் அங்க போயி ஃபர்ஸ்ட் நைட் வைத்துக் கொள்கிறேன் என கரிகாலன் சொல்கிறார். இதை கேட்ட ஜான்சி ராணி, எல்லாமே முடிஞ்சிடுச்சுனு சொன்னியே என்று கேட்க, அப்படிதான் ஆதிரை சொல்ல சொன்னுச்சு என சொல்லிவிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் தனது பழைய நண்பரை சந்திக்கும் ஆதி குணசேகரன், அவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, என்ன ஒரு கை மட்டும் வித்தியாசமாக இருக்கிறது என, அவர் கேட்க, அரிசி மூட்டை எடுத்து போடும் போது கை சுலுகிடுச்சு, என்ன பண்றது எல்லா வேலையும் நாம தான பாக்க வேண்டி இருக்கு என பொய் சொல்கிறார் அத்துடன் ப்ரமோ முடிகிறது.   

ஜீவானந்தம் யார் என்பதை தெரிந்து கொள்ள தற்போது  தனது பழைய நண்பரிடம் குணசேகரன் தஞ்சமடைந்துள்ளதால், அடுது்த வாரத்தில் ஜீவாநந்தம் குறித்து உண்மைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே குணசேகரனின் பழைய நண்பராக 'கோலங்கள்' சீரியலில் நடித்த தில்லை நாயகம் என்ட்ரி கொடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment