பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கேரக்டரில் நடித்து வரும் குமரன் தங்கதுரை மனைவி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோதர பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் 4 சகோதரர்களில் 3-வது சகோதரராக நடித்து வருபவர் குமரன் தங்கதுரை. கதிர் கேரக்டரில் நடித்து வரும் இவருக்கும் முல்லைக்கும் இடையேயான ரொமான்டிக் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
ஒரு குரூப் டான்ராக தனது பயணத்தை தொடங்கிய குமரன் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் டான்ராக பங்கேற்றுள்ளார். இவர் டான்சாராக பிரபலமான காலக்கட்டத்தில், விஜய் டிவியின் மூலம் பிரபலமான சுஹாசனி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நட்புடன் பழகி வந்துள்ளனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
பொதுவெளியில் பலருடன் பழகினாரும் குமரனின் கன்னியம், மற்றவர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதை இதை பார்த்துதான் குமரனை காதலித்ததாக சுஹாசினி பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். சீரியலில் இவர் சிரிக்கவே மாட்டாரா எந்நேரமும் ஒரே மாதிரியான முகபாவனைகளை காட்டுகிறார் என்று பல விமர்சனங்கள் இருந்தாலும் இவரை ரசிப்பதற்ககா பல கூட்டங்கள் உள்ளன.
இந்நிலையில், குமரன் சுஹாசினி தம்பதி நேற்று தங்களது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ள குமரனின் மனைவி சுஹாசினி, ஒவ்வொரு வருடமும் எங்களுக்கு வாழ்த்து சொல்லும் அனைவருக்கும் மிக்க நன்றி என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“