அடுத்த பிரச்னைக்கு தயாராகும் சந்தியா... சிவகாமி நிலைமை என்னவோ...!

Tamil Serial Update :சிவகாமி என்ற வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏற ரெடியாக போகிறது. நீங்களும் ரெடியா இருங்க.

Tamil Serial Update :சிவகாமி என்ற வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏற ரெடியாக போகிறது. நீங்களும் ரெடியா இருங்க.

author-image
D. Elayaraja
New Update
அடுத்த பிரச்னைக்கு தயாராகும் சந்தியா... சிவகாமி நிலைமை என்னவோ...!

Tamil Serial Raja rani 2 Rating Update : கன்னியமா போட்டுக்கிற எந்த ட்ரெசும் நல்ல ட்ரெஸ்தான் என்று சொன்னது உண்மையியே சூப்பர் யா இப்போதான் கொஞ்சம் சரியான ரூட்டல போறீங்க என்று சொல்ல வைத்துள்ளது ராஜா ராணி 2.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதை விட விமர்சனங்களை பெற்றதே அதிகம். அதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலின் திரைக்கதை. திருமணத்திற்கு பிறகும் பெண்களுக்கின் ஆசைக்கும் கனவுகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக கொண்டிருந்தாலும், உண்மை என்ன என்பதை தீர விசாரித்து பார்க்க வேண்டும் என்ற கருத்து இந்த சீரியலுக்கு பொருந்தாது.

சொந்த குடும்பத்திலேயே மாமியார் மீது போலீஸ் கம்ப்லைண்ட், தன்னைப்போன்ற மருமகளாக வந்தவர் மீது வெறுப்பு, கணவருக்கு தெரியாமல் திருட்டுத்தனம் என சொந்த வீட்டுக்கு சூனியம் வைப்பது போல ஒவ்வொரு காட்சியிலும் அர்ச்சான கேரக்டர் மட்டுமே உயர்ந்து நிற்கிறது. இதற்கு அடுத்து உண்மை என்ன என்பதை தீர விசாரிக்காமல், கண்ணில் பட்டதையெல்லாம் நம்பிக்கொண்டு எல்லாவற்றிற்கும் சந்தியாதான் காரணம் என்று சொல்லும் மாமியார்.

ராஜா ராணி சீரியலின் முக்கிய கேரக்டர் சரவணன் சந்தியா என்று சொல்லிவிட்டு, அவர்களின் கேரகடருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அர்ச்சானா சூழ்ச்சி செய்வது அதில் சந்தியா விழுவதும், இதை செய்தது அர்ச்சானாதான் என்று தெரிந்தாலும் சந்தியா வெளியில் சொல்லாமல் தனது பெயரை கெடுத்துக்கொள்வதும் உங்க அக்கப்போர் தாங்க முடியலயே என்று சொல்லும் அளவுக்குதான் உள்ளது.

Advertisment
Advertisements

இந்நிலையில், தற்போது அர்ச்சனா கேரக்டர் கர்ப்பமாக இருக்கிறார். ஆனாலும் அவர் தனது சூழ்ச்சியை மட்டும் நிறுத்தவில்லை. மேலும் வழக்கம்போல் அவர் செய்யும் சூழ்ச்சிக்கு உடந்தையாக இருப்பது போலவே மாமியார் சிவகாமியும் சந்தியாவையே குற்றம் சொல்கிறார். இதை பார்க்கும்போது இவ்வளவு பட்டும் நீங்கள் இன்னும் திருந்தவே இல்லையா என்றூன் கேட்க தோன்றுகிறது.

தற்போது சந்தியாவின் ஆசையை புரிந்துகொண்ட சரவணன், அவரை ஐபிஎஸ் படிக்க வைக்கிறார். இதை வீட்டிற்கு தெரியாமல் செய்வதால், அடுத்து இந்த பிரச்னை தான் வெடிக்க போகிறது என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. இது முதலில் அர்ச்சனாவுக்கு தெரியவர அப்படியே வீட்டிற்கும் தெரிந்து, சிவகாமி என்ற வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏற ரெடியாக போகிறது. நீங்களும் ரெடியா இருங்க.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Serial News Raja Rani 2

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: