உண்மை உடைத்த மயூ... வசமாக சிக்கிய கோபி... தாத்தா என்ன செய்ய போகிறார்?

Tamil Serial Rating : அப்பா அவ்வளவுசொல்லியும் கேட்காத கோபி தற்போது ராதிகாவை மணமுடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். இது தெரிந்தும் கோபியின் அப்பா எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறார்.

Tamil Serial Rating : அப்பா அவ்வளவுசொல்லியும் கேட்காத கோபி தற்போது ராதிகாவை மணமுடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். இது தெரிந்தும் கோபியின் அப்பா எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறார்.

author-image
D. Elayaraja
New Update
உண்மை உடைத்த மயூ... வசமாக சிக்கிய கோபி... தாத்தா என்ன செய்ய போகிறார்?

Tamil Serial Baakiyalakshmi Rating Update : தனது மகனுக்கு 3 பிள்ளைகள் இருக்கும்போது வேறொரு பெண்ணுடன் கல்யாணம் என்ற செய்தி கேட்டால் ஒரு அப்பா என்ன செய்வார்? நிகழ்வை கண்முன் நிறுத்தும் சீரியல்தான் பாக்யலட்சுமி

Advertisment

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலானா பாக்யலட்சுமி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மற்ற சீரியல்களை போல திருமணத்திற்கு மீறிய உறவை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், பாக்யாவின் கணவர் கோபி தனது பள்ளி தோழியுடன் பழகி வருகிறார். இதை முதலில் கோபியின் இளைய மகன் எழில் தெரிந்துகொள்ள அவன் அப்பாவை எச்சிரக்கிறான்.

ஆனாலும் அடங்காத கோபி மீண்டும் தோழி ராதிகாவுடன் ஊர் சுற்றுகிறான். இந்த முறை தனது மருமகள் பாக்யாவுடன் கோலிலுக்கு வரும் கோபியின் அப்பா கோபி ராதிகா உறவை பார்த்துவிடுகிறார். அதில் ஆரம்பிக்கிறது பிரச்சினை. அதன்பிறகு வீட்டில் கோபியும் அவரது அப்பாவும எலியும் பூனையுமாக இருக்கின்றனர். மேலும் ராதிகாவுடன் பழக கூடாது என்று குடும்பத்தினர் மீது அவரது அப்பா சத்தியம் வாங்கிக்கொள்கிறார்.

ஆனாலும் கோபி ராதிகாவுடன் பழகி வரும் நிலையில், வீட்டில் உள்ளவர்கள் அப்பாவுக்கும் பையனுக்கும் என்ன பிரச்சினை என்று கேட்க அப்பா எதும் சொல்லாமல் மறைத்துவிடுகிறார். அப்போது சந்தேகப்படும் எழில் தனது தாத்தாவிடம் உண்மையை சொல்லிவிடுகிறார். அடுத்து பொங்கல் கொண்டாட்டம் வர அனைவரும் கிராமத்திற்கு சென்றுவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளனர்.

Advertisment
Advertisements

இந்நிலையில் ராதிகாவுடன் பழகி வந்த கோபி தற்போது அவளை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துவிட்டார். இதை தெரிந்துகொண்ட ராதிகாவின் மகள் மயூ, பாக்யா வீட்டிற்கு வரும்போது கோபியின் அப்பாவிடம், எங்க அம்மாவுக்கு கோபி அங்கிலுக்கும் கல்யாணம் என்று சொல்லிவிடுகிறார். இதை கேட்டு கோபியின் அப்பா அதிர்ச்சியில் உரைகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

மகன் தவறு செய்கிறான் என்று தெரிந்து அவனை கண்டிக்கும் அப்பா, அதை ஏன் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல வில்லை என்று கேள்வி வருகிறது. பாக்யா நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லாமல் இருக்கிறார் என்றாலும் கூட தினம் தினம் கோபி தரும் டார்ச்சர் பாக்யாவுக்கு நிம்மதி பரிபோய்க்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு அவர் கோபி பற்றிய உண்மையை பாக்யவிடம் சொல்லிவிடடாமே என்ற ரசிகர்கள் கூறி வருகினறனர்.

இதுஒருபுறம் இருக்க அப்பா அவ்வளவுசொல்லியும் கேட்காத கோபி தற்போது ராதிகாவை மணமுடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். இது தெரிந்தும் கோபியின் அப்பா எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறார். இந்த கல்யாண விஷயம் எழிலுக்கு தெரிந்தால் அடுத்து என்ன நடக்கும் என்றும், தாத்தா இந்த கல்யாணத்தை நிறுத்த என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் அடுத்து வரும் எபிசோடுகள் பரபரப்பின் உச்சமாக இருக்கும் என்று சொல்லாம்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Baakiyalakshmi Serial Tamil Serial Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: