என்னப்பா ஜீவா... உனக்குள்ள இவ்ளோ ஃபீலிங்சா.... எதிர்பார்ப்பவே இல்லையே

Tamil Serial Update : யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் வரும் ஜீவா மீனாவிடம் ரொமான்ஸ் செய்ய அதன்பிறகு அண்ணியிடம் பேச வேண்டும என்று சொல்லி வெளியில் செல்கிறார்.

Tamil Serial Update : யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் வரும் ஜீவா மீனாவிடம் ரொமான்ஸ் செய்ய அதன்பிறகு அண்ணியிடம் பேச வேண்டும என்று சொல்லி வெளியில் செல்கிறார்.

author-image
D. Elayaraja
New Update
என்னப்பா ஜீவா... உனக்குள்ள இவ்ளோ ஃபீலிங்சா.... எதிர்பார்ப்பவே இல்லையே

Pandian Stores Serial Rating Udpate : என்னங்க இது கடையை டெவலப் பண்ணதும் போதும் ஆளாளுக்கு இப்படி குடிச்சிட்டு இருக்கீங்களே... ஆனாலும் இந்த சீன் நல்லாதான் இருக்கு என்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

Advertisment

விஜய்டிவியின் ப்ரைம் டைம் சீரியலான இந்த சீரியலில்,  ஒரு பெரிய பிரளயத்திற்கு பின் தற்போது சந்தோஷம் பூத்து குலுங்குகிறது. அதற்கு காரணம் பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ் திறக்கப்பட்டதுதான். ஒரு மளிகை கடை வைத்து பிழைத்துக்கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர், ஒரு சூப்பர் ஸ்டோர் கட்டியதும், அது திறப்பு விழாவுக்கு தாயாராக இருந்த போது நகராட்சி அதிகாரிகள் அந்த சூப்பபு ஸ்டோருக்கு சீல் வைத்ததும் கடந்த எபிசோடுகளில் காட்டப்பட்டது.

அதன்பிறகு அதற்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து மூர்த்தி கடைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தனது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கடை மீதான தடையை நீக்கினார். அதற்கு முன்புவரை கடை குறித்து சிந்தனையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் இருண்டு கிடந்தது. ஆனால் இப்போது கடை திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சந்தோஷ கலை தாண்டவமாடுகிறது. கடந்த சில எபிசோடுகளில் சந்தோஷத்தில் மூர்த்தி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சாப்பாடு ஊட்டிவிட்டது வைரலாக பரவியது.

இந்நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்த்தில் ஜீவா செய்யும் ரகளை வைரலாக பரவி வருகிறது. மச்சானுடன் சேர்ந்து குடித்துவிட்ட ஜீவாவை அவனது மாமனார் ஜனார்த்தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அப்போது மீனா ஜீவா குடித்திருப்பதை பார்த்து யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் கொண்டு சேர்க்கிறாள் இதற்கிடையே ஜெகா, கதிர், முல்லையின் அப்பா மூவரும் குடித்துக்கொண்டிருக்க அங்கு முல்லை வந்துவிடுகிறார்.

Advertisment
Advertisements

இதில் கதிர் குடிக்கவே இல்லை என்று ஊதிக்காட்ட, முல்லையின் அப்பாவும் தான் குடிக்கவில்லை என்று சொல்லி சத்தியம் செய்கிறார். ஆனால் ஜெகா அவர் குடித்தது உண்மைதான் என்று போட்டு கொடுக்க முல்லை கோபமாகி விடுகிறாள். அதன்பிறகு தனம் வந்து ஜெகாவிடம் பேச அத்துடன் நேற்றைய எபிசோர்டு முடிந்தது. இன்றைய ப்ரமோவில், யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் வரும் ஜீவா மீனாவிடம் ரொமான்ஸ் செய்ய அதன்பிறகு அண்ணியிடம் பேச வேண்டும என்று சொல்லி வெளியில் செல்கிறார். இங்கு அவர் தனத்திடம் பேசும் உரையாடல் காமெடியாக உள்ளது.  

இந்த சீனை பார்த்த ரசிகர்க்ள பலரும் ஜீவா மீனா சூப்பர் நடிப்பு என்று பாராட்டி வருகின்றனர். அதில் ஆரம்பத்தில் கதிர் குடித்துவிட்டு ஃபீலிங்காக இருந்தது சோகத்தை ஏற்படுத்தினாலும், இப்போது ஜீவா போதையில் செய்யும் ரகளை காமெடியாக உள்ளது. என்று கூறி வருகினறனர். குடும்பத்தில் ஆளாளுக்கு குடித்துவிட்டு ரகளை செய்யும் அளவுக்கு இப்போ இங்கே என்ன நடந்தது என்றும் சிலர் கேட்டு வருகின்றனர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijaytv Serial Tamil Serial Update Pandian Stores Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: