Tamil Serial Raja rani Rating Update : அப்பாடா ஒருவழியாஅர்ச்சனா சிவகாமிகிட்ட மாட்டிக்கிட்டா... ஆனா மாட்டி என்ன பண்ண அவர் கர்பபமா இருக்கறதா சொல்லி தப்பிச்சிடுவாளே என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். கரைக்ட்தான் இது ராஜா ராணி சீரியலின் கதைதான்.
மகன்கள் மீது அதீத பாசம் கொண்ட அம்மா ஒரு மருமகள் மீது மற்றொரு மருமகள் சுமத்தும் பழியை அப்படியே நம்பி குத்தம் சொல்பவர். ஆனால் அவர் நம்பும் 2-வது மருமகள் மாமியா சிவகாமி மீதே ஆன்லைன் புகார் கொடுத்தவிட்டார். இது தெரியாத சிவகாமி நம்ம மேல யார் புகார் கொடுத்திருப்பார் என்று அப்போது யோசித்தார். இப்போது அவரே அந்த புகார் பற்றி மறந்திருப்பார்.
ஆனால் இந்த புகார் யார் கொடுத்தது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று மாமியார் சிவகாமியிடம் பொய் சொல்லிவிட்டு திருமண நாளை கொண்டாட கணவருடன் குற்றாலாம் சென்ற அர்ச்சனா அங்கு லாஜ்ஜில் தங்கியபோது போலீசில் சிக்கிக்கொண்டார். ஒருவழியாக சரணவன் அங்கு சென்று அவர்கள் இருவரும் கணவன் மனைவிதான் என்று சொல்லி அழைத்து வருகிறான்.
இதற்கிடையே வீ்ட்டில் சரவணனை காணவில்லை என்று அனைவரும் பதறியடித்துக்கொண்டு காத்திருக்க சரவணன் செந்தில் அர்ச்சனாவுடன் வந்து இறங்குகிறான். அப்போது அர்ச்சானாவின் அம்மா பற்றி சிவகாமி விசாரிக்க சரவணன் அவர்களை ரூமுக்கு போக சொல்லிவிட்டு அவர்கள் குற்றாலம் போனதை மட்டும் சொல்கிறான். அப்போது அங்கு வரும் போலீஸ், சிவகாமி மீது புகார் கொடுத்தவர்களின் அட்ரசை சொல்கிறார். இதை கேட்டு சிவகாமியின் கணவர் இது நம்ம அர்ச்சனா அம்மா வீட்டு அட்ரஸ் என்று சொல்ல அனைவரும் ஷாக் ஆகின்றனா.
இந்த நேரம் பார்த்து அர்ச்சனாவின் அம்மாவும் அப்பாவும் அங்குவந்து அர்சசானா தான் புகார் அளித்தார் என்ற உண்மையை சொல்லிவிடுகிறார். இதை கேட்ட சிவகாமி கோபத்தின் உச்சத்திற்கு சொல்ல அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. அர்ச்சனா எப்போ மாட்டுவார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு அவர் இப்போது மாட்டியும் ஒன்னும் யூஸ் இல்லை என்பது போலத்தான்இ ஏனென்றால், எப்படிதான் சிவகாமி அர்ச்சனா மீது அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் அர்ச்சனா தான் இப்போது கர்ப்பமாக இருக்கும் உண்மையை சொல்லி தப்பித்துககொள்வாள் எள்பதுதான்.
இதனால் அர்ச்சனா மாட்டினாலும் அதில் யூஸ் இல்லை என்று ஒரு சில கூறி வந்தாலும், ரசிகர்கள் பலரும் இனிதான் சிவகாதமியின் ஆட்டம் தொடங்க போகிறது என்று சொல்லிவருகின்றனர். பொய் சொல்லிவிட்டு குற்றாலம் போன அர்ச்சனா இப்போது தான் செய்த தப்பு அனைத்திலும் ஒரு நேரத்தில் மாட்டிக்கொண்டதால் சீரியல் இனிவேறு ரூட்டில் பயணிக்குமா அல்லது வழக்கம்போல அர்ச்சனாவை மன்னித்து ஏற்றுக்கொள்வாரா சிவகாமி என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஒருவேளை அர்ச்சனா கர்ப்பம் என்று சொல்லி சிவகாமி அவளை மன்னித்து ஏற்றுக்கொணடால் அர்ச்சனாவின் ஆட்டம் தொடரும். மாறாக சிவகாமி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், சிவகாமியின் ஆட்டம் ஆரம்பம் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த காட்சிகள் அனைத்தும் அர்ச்சனாவின் கனவு என்று வந்தால் இயக்குநர் நம்மிடம் ஆட்டத்தை தொடங்கிவிட்டார் என்ற அர்த்தம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.