விஜே பார்வதி தனது மகன் மற்றும் அம்மா தனது போட்டோக்களுக்கு என்ன கருத்து சொல்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள தனது போட்டோக்களை அவர்களிடம் காட்டு வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
யூடியூப்பில் பிரபல கலாட்ட சேனலில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர் விஜே பார்வதி. ஆனந்த விகடனில் நிருபராக தனது மீடியாக வாழ்க்கையை தொடங்கிய இவர், தெருக்கூத்து என்ற பொது நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து கோலிவுட்டில் பல பிரபலங்களை பேட்டி எடுத்துள்ள விஜே பார்வதி, ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் விஜே பார்வதி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மட்டும் நெட்டிசன்கள் மத்தியில் கலவையாக கமெண்ட்கள் வருவது வழக்கமான ஒன்று. ஆனாலும் பார்வதி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் தனது அம்மா மற்றும் மகனுடன் இருக்கும் விஜே பார்வதி, தனது இன்ஸ்டா போட்டோக்களை காட்டி அவர்களின் கருத்தக்களை கேட்டு வருகிறார். இதில் ஒரு போட்டோவை பார்த்த அவரது அம்மா இப்படி கிழித்துக்கொண்டு இருக்க கூடாது, தொப்புள் வெளியில் தெரிய கூடாது என்று சொன்னேனெ என்று கேட்கிறார். அவரது மகனும் ரெண்டு சைடும் கிழிஞ்சி இருக்கு என்று சொல்கிறான்.
அதன்கு விஜே பார்வதி கிழிஞ்ச பேண்ட் இப்போ பேஷன் ஆகிவிட்டது என்று சொல்கிறார். அதேபோல் தொப்புள் நமது பாடியில் இருக்கும் ஒரு பகுதி என்று சொல்ல அதற்கு அவரது அம்மா க்ளாசெல்லம் எடுக்க வேண்டாம் என்று நோஸ்கட் செய்துவிடுகிறார். மேலும் போட்டோவை பார்ப்பவர்களுக்கு பேண்ட் கிழிந்ததுதான் தெரியும் நீ என்ன பிச்சக்காரியா என்று கேட்கிறார். இப்படி பல போட்டோக்களுக்கு அவரது அம்மாவும் மகனும் கமெண்ட் கொடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.