Advertisment

மாகாவுக்கு எதிராக சீதா - மதுமிதா... கோபத்தின் உச்சத்தில் சண்முகம் : ஜீ தமிழ் சீரியல் அப்டேட்

ஜீ தமிழின் அண்ணா மற்றும் சீதாராமன் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்துது என்பதை பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Anna Seetha raman

அண்ணா - சீதாராமன்

சௌந்தர பாண்டிக்கு எதிராக சீறும் ஷண்முகம் 

Advertisment

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.  இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தர பாண்டி கோபப்பட்டு சாப்பாட்டு தட்டை தூக்கி வீசிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

சௌந்தரபாண்டி நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்னு வரேன் ஆனா நீ என்னடா என்று பேச வர முத்துப்பாண்டி சண்முகம் இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டு போய்ட்டான் அதானே அவன் சொன்னா இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டுமா? அவன் ரோடு முழுக்க பத்திரிகையை போட்டு போயிட்டான், அந்த பத்திரிகை எல்லாத்தையும் எடுத்து நான் ஊர் முழுக்க குடுத்துட்டு வந்து இருக்கேன் இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என சொல்ல சௌந்தரபாண்டி சந்தோஷப்பட்டு இப்ப போடுடி சாப்பாடு என அவரும் சாப்பிட உட்காருகிறார்.

அதன் பிறகு பாக்கியம், பரணி மற்றும் சிவபாலனிடம் உங்க அப்பனும் அண்ணனும் கூட்டு சேர்ந்துட்டா கண்டிப்பாக அந்த விஷயத்தை நடத்தி முடிச்சிடுவாங்க, நாளைக்கு முதல் வேலையா சண்முகத்தை சந்தித்து ரத்னாவுக்கும் வெங்கடேசுக்கும் கல்யாணத்தை பண்ண சொல்லு, அப்படி இல்லன்னா இந்த ஊரை விட்டு போயிட சொல்லு என்று சொல்கிறாள். சிவபாலன் நான் இப்பவே போய் சொல்லிட்டு வரேன் என்று கிளம்ப பாக்கியம் இப்ப வேண்டாம் நாளைக்கு காலையில போய் சொல்லுங்க என்று தடுத்து நிறுத்துகிறாள்.

மறுநாள் காலையில் சண்முகம் வீட்டில் இசக்கி கனிக்கு தலையில் சிக்கு எடுத்துக் கொண்டிருக்க அவள் இதுக்குத்தான் நான் உன்கிட்ட தலையை காட்டுவதில்லை, இதுவே ரத்னா அக்காவா இருந்தா வலிக்காம சிக் எடுப்பா என்று சொல்கிறாள். இதைக் கேட்டு ரத்னா சிரிக்க கல்யாணம் நின்னு போச்சுன்னு சொன்னதும் உன் முகத்தில் சிரிப்ப பார்க்க முடியுது என்று கலாய்க்கிறார்கள்.

அதன் பிறகு வைகுண்டம் வெளியில் கிளம்ப சண்முகம் எங்கே போறீங்க என்று கேட்க சௌந்தர பாண்டிக்கு போய் சமாதானம் பேசிட்டு வருவேன் என சொல்ல தங்கைகள் எல்லாரும் அதெல்லாம் ஒன்றும் போக வேண்டாம் அதான் அண்ணன் பேசிட்டு வந்துடுச்சுல அதுவே போதும் என தடுத்து நிறுத்துகின்றனர்.

இந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வரும் பரணி சண்முகம் பாக்கியம் சொன்ன விஷயங்களை சொல்ல அவன் அதெல்லாம் என்னை மீறி எதுவும் செய்ய முடியாது, ஊரை விட்டு போக முடியாது திரும்பவும் தங்கச்சி கல்யாணத்துல அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாது, எதுவாக இருந்தாலும் நான் இந்த ஊரில் இருந்து பார்த்துக்கொள்கிறேன் என சொல்கிறான்.

அதன் பிறகு ரத்னா ஸ்கூலுக்கு வர வெங்கடேஷிடம் உங்க தங்கச்சி மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா அவ சொக்கத்தங்கம் என்று சொன்னதற்காக நன்றி சொல்ல அவன் நான் அன்னைக்கு உண்மைய தான் சொன்னேன் என்று சொல்கிறான். அதன் பிறகு ரத்னா இப்பவும் எனக்கு உங்களை பிடிக்கும் ஆனால் அண்ணன் சொன்னாதான் உங்களோட கல்யாணம் என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறாள்.

இந்த சமயம் பார்த்து அங்கு வரும் சக டீச்சர் உங்களுக்கு கல்யாணமா வாழ்த்துக்கள், மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அங்க பத்திரிக்கை கொடுத்துட்டு இருக்காங்க என்று சொல்ல அதிர்ச்சி அடைந்து நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

ராமிடம் டிராமா போடும் மகா.. சீதாவுடன் சேர்ந்த மதுமிதா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.  இந்த சீரியலில் மகா சீதாவிடம் கோபமாக பேசிக் கொண்டிருக்க சீதா ராம் வந்ததும் அவர்கிட்ட என்ன பதில் சொல்லப் போறீங்க என கேள்வி கேட்டு அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

மகா, சீதா என இருவருக்கும் இடையே வாக்குவாதம் காரசாரமாக நடக்க சீதா உங்க ரெண்டு பேரையும் ஜெயில்ல போடணும் தான் நினைச்சேன் என்று சொல்ல அப்போது சாமி தங்கைகள் மூணு பேரும் சீதாவை எதிர்த்து பேச இவங்க ரெண்டு பேரும் எதுக்கு போனதும் நீங்க மூணு பேரும் என்கிட்ட நல்லா மாட்டிப்பீங்க, உங்கள வச்சு செய்வேன்.

வீட்டு செக்யூரிட்டி மற்றும் வேலைக்கார அக்கா எல்லாரும் நிறுத்தி விட்டு உங்கள வச்சு மொத்த வேலையும் வாங்குவேன் என்று சொல்ல அவர்கள் மூணு பேரும் சீதா அப்படி பண்ணாலும் பண்ணுவா என்று மகாவிடம் பயத்துடன் பேச அவள் கோபமாக உள்ளே போகிறாள். ஆனால் சீதா திரும்பவும் மகாவை கூப்பிட்டு சவால் விட அர்ச்சனா உன்ன கொல்லாம விட்டது தப்பு என்று சொல்ல தைரியம் இருந்தா இப்ப வந்து கை வையுங்க பார்க்கலாம் என்று சீதா கர்ஜிக்கிறாள்.

இதனைத் தொடர்ந்து ராம் மற்றும் மதுமிதா வீட்டுக்கு வந்து இறங்க வெளியில் பூச்சட்டிகள் உடைந்து இருப்பதை பார்த்து உள்ளே வந்து என்ன ஆச்சு என்று கேட்க சீதா பாஸ் கேட்கிறார் இல்ல சொல்லுங்க என்று மகாலட்சுமியை சீண்ட அவள் அப்படியே கண்ணீர் விட்டு அடுத்த படி உங்க அப்பாவும் சித்தப்பாவும் சேர்ந்து தான் சூர்யா வீட்டுல கஞ்சா வச்சிருக்காங்க, சீதா எந்த தப்பும் பண்ணல அவ நல்லவ என அழுது புலம்பி அப்படியே மயங்கி விழுவது போல நடிக்கிறாள்.

இதைக் கேட்ட மதுமிதா கண்ணீருடன் ஓடிச் சென்று கதறி அழ சீதா சமாதானம் செய்ய ‌நான் எப்படி உன்னை தப்பா நினைச்சேன்னு தெரியல, நான் கெட்டவ என்ன மன்னிச்சிடு என்று சொல்ல சீதா நீ எக்காரணத்தைக் கொண்டும் மகாலட்சுமியை நம்பாத, மகாலட்சுமியை மடக்கி பிடிக்க நீதான் எனக்கு உதவி செய்யணும். தொடர்ந்து நீ மகாலட்சுமி டீம்ல இருக்கிற மாதிரியே நடிக்கணும் என்று சொல்ல மதுமிதாவின் சம்மதம் சொல்லி மகாவுக்கு எதிராக சீதாவுடன் கூட்டணி அமைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment