எழுந்து நின்று கை தட்டிய கமல்... 'அவர் தான் என்னோட குருநாதர்': ஆனந்த கண்ணீர் விட்ட ஊர்வசி!

நடிகர் கமல்ஹாசன் குறித்து நடிகை ஊர்வசி புகழ்ந்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் குறித்து நடிகை ஊர்வசி புகழ்ந்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
kamal

எழுந்து நின்று கை தட்டிய கமல்... 'அவர் தான் என்னோட குருநாதர்': ஆனந்த கண்ணீர் விட்ட ஊர்வசி!

மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் ஊர்வசி பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். தமிழில் ரேவதி, ரோகிணி, ஊர்வசி நடிப்பில் வெளியான ‘மகளிர் மட்டும்’ திரைப்படம் இன்றளவும் பேசும் படமாக உள்ளது.

Advertisment

தொடர்ந்து, தமிழில்  ’முந்தானை முடிச்சு’, ‘மைக்கேல் மதன காம ராஜன்’, ‘எட்டுபட்டி ராசா’, ‘சூரறைப்போற்று’, ‘வீட்ல விஷேசம்’, ‘ஜே பேபி’ என தொடர்ந்து தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ‘ஜே பேபி’ திரைப்படத்தில் ஊர்வசியில் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

நடிகை ஊர்வசிக்கு அண்மையில் மலையாளத்தில் ‘உள்ளொழுக்கு’ (Ullozhukku) படத்தில் நடித்ததற்காக சிறந்த உறுதுணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதுகுறித்து பேசிய அவர், கமல்ஹாசன் தான் தன்னை மலையாளத்தில் நடிக்குமாறு கூறியதாக தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து, கமல்ஹாசன் போன்று ஒரு நட்பு கிடைப்பது பெரிய விஷயம். திறமைக்கு மதிப்புக் கொடுப்பவர் அவர். ஊர்வசி ஒரு கணிக்க முடியாத திறமையான நடிகை என்று சொன்னதால் மட்டுமே தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்டேன். அதுதான் உண்மை.

Advertisment
Advertisements

தமிழ் படங்களில் நடித்த என்னை மலையாள திரையுலகிற்கு போக சொன்னதே கமல்ஹாசன் தான். காதல் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் எல்லாம் உங்களுக்கு பிடிப்பதில்லை. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறீர்கள். அதனால், தமிழ் சினிமா உங்களுக்கு  செட்டாகாது. நீங்கள் மலையாளத்துக்குச் செல்லுங்கள். நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கலாம் என்றார். அதன்பிறகு தான் நான் மலையாளத்தில்  கவனம் செலுத்த தொடங்கினேன்” என்று கூறினார்

இப்படி நடிகர் கமல்ஹாசன் மீது ஊர்வசி அளவு கடந்த மரியாதை வைத்துள்ளார். இதற்கு சான்றாக தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சைமா விருது வழங்கும் விழாவில் நடிகை ஊர்வசிக்கும் விருது அறிவிக்கப்பட்டது. அதனை புன்னகையுடன் வாங்கி கொண்ட நடிகை ஊர்வசி ‘எனக்கு சந்தோஷத்தில் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. 

நான் மகா குருவாக நினைக்கும் கமல்ஹாசன் நான் விருது வாங்க மேடைக்கு வரும் பொழுது எழுந்து நின்று மரியாதை செய்தார். மறுபடியும் மலையாளத்திற்கு சென்ற ஊர்வசி தமிழுக்கு வந்து கவனிக்கப்பட்டது கமல்ஹாசன் என்கிற ஒரு மகா நடிகன் வார்த்தையால் மட்டும் தான் என்று நான் நினைக்கிறேன். அவர் கூட இருக்கும் பொழுது இன்றைக்கும் எனக்கு கால்கள் நடுங்கும். இன்று அவர் எழுந்து நிற்பது எனக்கு பெருமையாக உள்ளது “ என்றார்

Cinema Kamalhaasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: