தென்னிந்தி திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கு படங்களில் நடிக்க தடை விதிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. முதல் படத்திலேயே பிரபலமான இவர், அடுத்து புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளியான அஞ்சானி புத்ரா படத்தில நடித்தார்.
தொடர்ந்து 2018-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சலோ என்ற படத்தில் நடித்த ராஷ்மிகா தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் ஏராளமான ரசிகர்களை பெற்ற தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இடையில் சுல்தான் படத்தின் மூலம் தமிழிலும், குட்பாய் படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமான ராஷ்மிகா தற்போது மிஷன் மஞ்சு என்ற இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து விஜயுடன் வாரிசு படம் (தமிழ், தெலுங்கு) அனிமல் என்ற இந்தி படத்திலும், அல்லு அர்ஜூனுடன் புஷ்பா படத்தின் 2-ம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது முதல் படத்தின் நாயகனான ரக்ஷித் ஷெட்டியுடன் காதலில் இருந்த ராஷ்மிகா நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில், இவரின் படங்கள் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றதால் திருமணத்தை நிறுத்திவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார். மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ராஷ்மிகா தனது முதல் படமான கிரிக்கி பார்ட்டி பற்றி பேசும்போது படத்தின் தயாரிப்பார் மற்றும் எழுத்தாளது ரக்ஷித் ஷெட்டியின் பெயரை தவிர்த்துவிட்டார்.
இதனால் கன்னட ரசிகர்கள் கோபமடைந்துள்ள நிலையில், தன்னை வளர்த்துவிட்ட கன்னட திரையுலகை மறந்துவிட்டு ராஷ்மிகா தற்போது இந்தி தமிழ் தெலுங்கில் கவனம் செலுத்தி வருவதாக கூறி வருகின்றனர். இதன் காரணமாக ராஷ்மிகாவுக்கு கன்னட திரையுலகில் நடிப்பதற்கு தடை விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் ராஷ்மிகாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், இது தொடர்பான ட்விட்டர் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil