Advertisment

சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவுக்கு விஜய்தான் பிரச்னையா? பரபரப்பை கிளப்பும் வாரிசு

சங்கராந்தி பண்டிகைக்கு நேரடி தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை அளித்து தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் போட்டுள்ளது

author-image
WebDesk
New Update
சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவுக்கு விஜய்தான் பிரச்னையா? பரபரப்பை கிளப்பும் வாரிசு

தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு படம் ஆந்திராவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் தமிழகத்தில் தங்களது ப்ரமோஷன் பணிகளை தொடங்கியுள்ளனர்.

Advertisment

பீஸ்ட் படத்திற்கு பிறகு தளபதி விஜய், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, யோகிபாபு, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான தமன் இந்த படத்தின் மூலம் முதல்முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பிரபல தெலுங்க தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரித்துள்ள இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 12-ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ஆந்திராவில் சங்கராந்தி கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் சங்கராந்தி பண்டிகைக்கு நேரடி தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை அளித்து தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் போட்டுள்ளது

மேலும் சங்கராந்தி பண்டிகைக்கு சிரஞ்சீவி நடிப்பில் வால்டர் வீரய்யா, பாலக்கிருஷ்ணா நடிப்பில் வீர சிம்ஹா ரெட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளதால், விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ஆந்திராவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவு தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ள நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் வாரிசு படத்திற்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்னர். இதில் தமிழ் ரசிகர்கள் பலரும் வாரிசு படம் ஆந்திராவில் வெளியாவதில் சிக்கல் இருப்பது குறித்து கவலைப்படமால் வாரிசு பொங்கல் என்ற ஹேஸ்டேக்குடன் படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தெலுங்கு பிரபலம் வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில், அன்புள்ள தமிழ் இயக்குனர்களே, வாரிசுடு படத்தை ஆதரிப்பதை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம், ஆனால் தில் ராஜு ஏற்கனவே நிலைமையை கட்டுக்குள் வைத்துள்ளார், மேலும் அவர் சுமூகமான மற்றும் பிரமாண்டமான வெளியீட்டை விரைவில் உறுதி செயவார் என்று கூறியுள்ளார்.

மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மம்முட்டிக்கு இணையாக ரசிகர்களை பெற்று விஜய் அவர்களுக்கு பிரச்சினையாக மாறியதாக இயக்குனர் ராம் கூறியதை பதிவிட்டு, தற்போது தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி பாலக்கிருஷ்ணா இருவருக்கு பிரச்சினையாக மாறியுள்ளதாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment