Advertisment

அட்லீயுடன் துபாய்க்குப் போன விஜய்

அட்லீ இயக்கும் அடுத்த படத்திலும் நடிக்க விஜய் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படும் நிலையில், இந்த சுற்றுலா மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

author-image
cauveri manickam
Nov 13, 2017 16:08 IST
அட்லீயுடன் துபாய்க்குப் போன விஜய்

விஜய், அட்லீ உள்ளிட்ட ‘மெர்சல்’ படக்குழுவைச் சேர்ந்த சிலர், விடுமுறையைக் கழிக்க துபாய் சென்றுள்ளனர்.

Advertisment

விஜய் நடிப்பில் ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ என இரண்டு படங்களை இயக்கியுள்ளார் அட்லீ. கடந்த தீபாவளிக்கு ரிலீஸான ‘மெர்சல்’, கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

பல பிரச்னைகளுக்கு உள்ளானாலும், சூப்பர் ஹிட் வெற்றி கிடைத்திருப்பதில் படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே மகிழ்ச்சி. குறிப்பாக, விஜய் மற்றும் அட்லீ இருவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதைக் கொண்டாடுவதற்காக இருவரும் துபாய் சென்றுள்ளனர். அவர்களுடன் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு மற்றும் மேனேஜர் ஜெகதீஷ் ஆகியோரும் சென்றுள்ளனர்.

அட்லீ இயக்கும் அடுத்த படத்திலும் நடிக்க விஜய் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படும் நிலையில், இந்த சுற்றுலா மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்கிறார்கள்.

#Actor Vijay #Tamil Cinema #Mersal Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment