Advertisment

‘மெர்சல்’ கட்அவுட் வைத்துவிட்டுத் திரும்பிய விஜய் ரசிகர் பலி

‘மெர்சல்’ கட்அவுட் வைத்துவிட்டுத் திரும்பிய விஜய் ரசிகர் ஸ்ரீநாத் பஸ் மோதி பலியான சம்பவம், விஜய் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mersal U/A certificate, Samantha Ruth Prabhu, Kajal Agarwal, Actor Vijay,

விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படம், கடந்த வாரம் புதன்கிழமை தீபாவளியன்று ரிலீஸானது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில் நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் மூன்று பேரும் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தை, 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருந்தது.

Advertisment

பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்த ‘மெர்சல்’ படம், 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் வாரம் முடிந்து, நேற்றுடன் இரண்டாவது வாரம் தொடங்கியிருக்கிறது. இதற்காக கட்அவுட் வைத்துவிட்டுத் திரும்பிய கேரள விஜய் ரசிகரான ஸ்ரீநாத், பஸ் மோதி பலியாகியுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத். திருவனந்தபுரம் விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவராக இருக்கும் இவரை, ‘லவ் டுடே’ ஸ்ரீநாத் என்றால் எல்லோருக்கும் எளிதாக விளங்கும். விஜய்யின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட முதல் கேரள ரசிகர் இவர்.

இவரை மையமாக வைத்து சமீபத்தில் ‘போக்கிரி சைமன்’ என்ற மலையாளப் படம் கூட ரிலீஸானது. ஸ்ரீநாத் கேரக்டரில் ‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் அப்பானி ரவி என்ற சரத் நடித்திருந்தார். ‘மெர்சல்’ இரண்டாவது வாரம் தொடங்கியதை முன்னிட்டு கட்அவுட் வைத்துவிட்டுத் திரும்பிய ஸ்ரீநாத், அதிகாலை 2 மணிக்கு பஸ் மோதி பலியானார். இந்த சம்பவம் விஜய் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Actor Vijay Tamil Cinema Mersal Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment