Bharathi Kannamma: நிறத்தை மையப்படுத்தி, விஜய் டிவி-யில் ‘பாரதி கண்ணம்மா’ என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கறுப்பே பிடிக்காது எனும் சவுந்தர்யாவுக்கு, மருமகளாய் வருகிறாள் கண்ணம்மா.
கண்ணம்மாவின் சித்தி மகளுக்கும், கண்ணம்மாவின் புருஷன் பாரதியின் தம்பி அகிலனுக்கும் திருமணம். நலங்கு போன்ற, சம்பிரதாயங்கள் நடந்து கொண்டு இருக்கும் வேளையில், எங்கும் போகக் கூடாது என ஸ்ட்ரிக்டாக சொல்லி விடுகிறாள் அவளின் மாமியார்.
அகிலனுக்கு அஞ்சலியை பெண் பார்க்க போன போதுதான், அஞ்சலியின் அக்கா கண்ணம்மாவை பார்க்கிறான் பாரதி. பார்த்ததும் அவளை அவனுக்குப் பிடித்துப் போகிறது. ஆனால், தன்னைப் பார்க்க வந்த அகிலனை விட பாரதியைப் பிடித்துப் போகிறது அஞ்சலிக்கு. ஏழையாக இருந்தாலும் அஞ்சலியின் குடும்பத்தை ஏற்றுக் கொள்கிறாள் சவுந்தர்யா. காரணம் அஞ்சலி மிஸ் சென்னை பட்டம் வாங்கிய அழகு நிறைந்த பெண் என்பதால்.
உங்களை துரத்தி துரத்தி காதலிக்கிறேன் என பாரதியிடம் அஞ்சலி சொல்ல, கொதித்துப் போகிறான் பாரதி. தம்பிக்கு பார்த்த பெண், இப்படி சொல்கிறாளே என, உடனடியாக கண்ணம்மாவை திருமணம் செய்து கூட்டிக் கொண்டு வருகிறான். சும்மாவே கண்ணம்மாவை சவுந்தர்யாவுக்குப் பிடிக்காது. இந்நிலையில் மருமகளாய் வந்துவிட்ட அவளை, வேலைக்காரி போல நடத்தும் சவுந்தர்யா யாரிடமும் அவள் தனது மருமகள் என காட்டிக் கொள்வதில்லை, மாறாக அவளின் தங்கை அஞ்சலியை தான் அழகான் மருமகள் என்று கூறி பூரிப்படைகிறாள்.
கண்ணம்மாவை தனது மருமகளென்று திருமண நேரத்தில் யாரும் பார்த்து விடக் கூடாது, என நினைக்கும் சவுந்தர்யா பாரதியை பகடை காயாய் பயன்படுத்தி, அவளை வர விடாமல் தடுக்க திட்டம் தீட்டுகிறாள்.