Advertisment

மகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி... சண்முகம் சொன்ன குட் நியூஸ் : ஜீ தமிழ் சீரியல் அப்டேட்

ஜீ தமிழின் அண்ணா மற்றும் சீதாராமன் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anna Seetha raman

அண்ணா - சீதாராமன்

ஸ்டேஷனில் மகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Advertisment

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.  இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சேது மற்றும் சுபாஷ் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

போலீஸ் இதுவரையில் கைது செய்து அழைத்து வர மகா இவங்களை எதுக்கு கைது பண்ணீங்க நான் டிஎஸ்பிக்கு போன் செய்கிறேன், எங்க தப்பு பண்ணதுக்கு உங்ககிட்ட என்ன ஆதாரம் இருக்கு என கேள்வி கேட்க அவர்கள் இவர்களை கைது செய்ய சொன்னது டிஎஸ்பி தான் நீங்கள் எதுவாக இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வாங்க உங்களுக்கு ஆதாரத்தை நாங்க காட்டுவோம் என்று சொல்லி இருவரையும் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.

மறுபக்கம் ஸ்டேஷனில் சீதா ரிலீஸ் ஆகி வெளியே வந்தது தெரியாமல் அவளுக்காக ராம் மற்றும் மதுமிதா இருவரும் வெகுநேரமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது வெளியே வரும் செல்லம்மா நீங்க தான் ராமா ரொம்ப அழகான பையனா இருக்கீங்க. சீதா உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்கா, அவ ரொம்ப நல்ல பொண்ணு என்று சொல்ல இவர்கள் சீதா இங்கே கேட்க செல்லம்மா ரிலீஸ் ஆகி வெளியே போயிட்டா என்று சொல்ல அதைக் கேட்டு சந்தோஷப்படுகின்றனர்.

மேலும் அப்படி என்றால் யார் கைது பண்ணி இருக்காங்க என்று கேட்க செல்லம்மா அது எனக்கு தெரியாது தப்பு பண்ண உங்களை கைது பண்ணி இருப்பாங்க என்று சொல்கிறாள். அதன் பிறகு ஸ்டேஷனுக்கு வரும் மகா நான் அமைச்சருக்கு போன் பண்றேன், இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்ன ஆதாரம் இருக்கு என்ன சத்தம் போட போலீஸ் இருவரும் கஞ்சா வைத்தது பற்றி பேசிய வீடியோ ஆதாரத்தை காட்ட அதை பார்த்து மகா அதிர்ச்சி அடைந்து நிற்கிறாள்.

நீங்க எங்க வேணாலும் போங்க ஆனா கோர்ட்ல இந்த ஒரு ஆதாரம் போதும் உங்களால எதுவும் செய்ய முடியாது என சொல்ல மகா ஜெயிலில் இருக்கும் சுபாஷ் மற்றும் சேதுபதியை பிடித்து சத்தம் போடுகிறாள். அவர்கள் நாங்க பேசுனது உண்மைதான் ஆனால் நம் ஆபீஸ்ல கேமரா வச்சது யாரு முதல்ல அதை போய் கண்டுபிடி அப்புறம் வந்து எங்கள பாரு அதுவரைக்கும் வராதே என சொல்லி அனுப்ப உச்சகட்ட கோபத்தோடு வீட்டுக்கு வருகிறாள்.

வீட்டுக்கு வந்த மகா துரை தான் இதுக்கெல்லாம் காரணம் என அவனை பிடித்து ஓவராக சத்தம் போட சீதா தப்பு பண்ணவங்கள கைது பண்ணி இருக்காங்க, அவங்கள கைது பண்ண உதவியா இருந்த இவரை எதுக்கு திட்டுறீங்க என மகாவிடம் வாக்குவாதம் செய்ய இருவருக்கும் இடையே விவாதம் அதிகமாகிறது.

மகா கோபத்தில் பூச்சட்டி எல்லாம் தூக்கி போட்டு உடைக்கிறாள். பிறகு சீதா உங்க டிராமா எல்லாம் இருக்கட்டும் இப்போ பாஸ் வந்து எதுக்காக இவங்கள கைது பண்ணாங்கன்னு கேட்டா நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தங்கைகளுக்கு சண்முகம் சொன்ன குட் நியூஸ்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் இந்த கல்யாணம் நடக்காது என சொல்லிவிட்டு வர முத்துப்பாண்டி எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுக்கப் போவதாக முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

பிரியாணி பொட்டலத்துடன் சண்முகம் புத்தியுள்ள மனிதர்கள் எல்லாம் வெற்றி பெறுவதில்லை என பாட்டு பாடிக்கொண்டே வீட்டுக்குள் வருகிறான். தன்னுடைய தங்கச்சியிடம் சைகையில் அக்கா அழுகிறாளா? என கேட்க அவள் இல்லை என சொல்கிறாள். பிறகு பிரியாணி வாங்கி வந்திருக்கேன் வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிட இசக்கி எங்க போயிட்டு வந்த அண்ணே என்று கேட்க திருச்செந்தூர் முருகனைப் பார்க்க போயிருந்ததாக சொல்கிறான்.

அதன் பிறகு ரத்னா அங்கு வந்து கனிக்கு உடம்பு சரி இல்லை என சொல்ல சண்முகம் ஓடிச்சென்று அவளை தூக்கி வந்து உட்கார வைத்து இதுதான் மருந்து சாப்பிடு என எல்லோருக்கும் பிரியாணியை ஊட்டி விடுகிறான். மேலும் அப்பா வைகுண்டம் கல்யாண பத்திரிக்கை வாங்கப் போனியே எங்க பத்திரிக்கை எனக் கேட்க அது பறந்து போக வேண்டிய இடத்துக்கு போயிடுச்சு என சொல்கிறான்.

மறுபக்கம் முத்துப்பாண்டி இரவில் ஜீப்பில் போலீசார் உடன் உட்கார்ந்து கொண்டு அந்த வழியாக வரும் எல்லோருக்கும் பத்திரிக்கை வைத்து கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும் என அழைக்கிறான். மேலும் சனியனை அழைத்து நாளைக்கு சண்முகம் வீட்டுக்கு போய் உன் தங்கச்சி உடைய கல்யாண பத்திரிக்கை வந்துடுச்சு கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடுவேன் என சொல்லிட்டு எனக்கு தகவல் கொடுக்கணும் என சொல்ல அவனும் அப்படியே செய்கிறேன் ஐயா  என்கிறான்.

வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகு சண்முகம் வாங்க எல்லாரும் ஒண்ணா உக்காந்து பேசலாம் அப்படி பேசி ரொம்ப நாளாச்சு என சொல்லி எல்லாரையும் கூப்பிட அப்பா நானும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா என்று கேட்க வாங்க என சொல்கிறான். என்ன பேசுறது என்று கேட்க தூக்கம் வரல நான் ஒரு கதை சொல்றேன் என சண்முகம் தன்னுடைய கதையை பறவைகள் கதையாக சித்தரித்து சொல்கிறான்.

ஒரு குடும்பத்துல ஆறு பறவை இருந்துச்சு அம்மா பறவை விட்டு போயிடுச்சு அண்ணா பறவை நான்கு தங்கச்சி பறவைங்க மேல பாசத்தை கொட்டி வளர்த்து தங்கச்சி பறவை கிட்ட கேட்காமலயே சிங்ககுகையில் இருக்கும் ஒரு குட்டி சிங்கத்துக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க முடிவெடுத்துச்சு. அந்த குட்டி சிங்கம் ஒரு பறவைய நாறு நாராக கிழித்தெடுக்கும் போது அண்ணன் பறவை பார்த்து இந்த கல்யாணம் நடக்காதுன்னு பெரிய சிங்கத்திடம் சொல்ல அந்த சிங்கம் கர்ஜித்தது.

ஆனாலும் அண்ணன் பறவை அதுக்கெல்லாம் அசர மாட்டேன் என சொல்லிடுச்சு என்று சொல்ல தங்கைகள் எல்லோரும் ஷாக் ஆகின்றனர். அதே சமயம் சந்தோஷமும் அடைகின்றனர். அடுத்ததாக பரணி, பாக்கியம் மற்றும் சிவபாலன் ஆகியோர் வீட்டுக்கு முத்துப்பாண்டி வந்து அவனுக்கு விஷயம் தெரிந்தால் என்ன நடக்குமோ என பயந்து கொண்டிருக்க முத்துப்பாண்டி வீட்டுக்கு வருகிறான். அவனிடம் சிவபாலன் பாக்கியம் ஆகியோர் சண்முகம் வீட்டுக்கு வந்து இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொன்ன கதை சொல்ல அவன் பெரிதாக ரியாக்ட் செய்யாமல் அப்படியா என சாதாரணமாக பேசுகிறான்.

கோபமாக இருக்கும் சௌந்தரபாண்டி முத்துப்பாண்டியிடம் பேச வர அம்மா ரொம்ப பசிக்குது சாப்பாடு எடுத்து வை என்று சொல்லி அப்பாவை பேச விடாமல் செய்கிறான். மேலும் நீங்களும் உக்காருங்கப்பா சாப்பிட்டுகிட்டே பேசலாம் என்று சொல்லி முத்துப்பாண்டி உட்கார சௌந்தரபாண்டி இன்னும் கோபம் அதிகமாகி சாப்பாடு தட்டை தூக்கி வீசுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment