அந்த சீன அப்படியேவா எடுப்பீங்க... கொஞ்சம் மாத்தி யோசிங்கப்பா; ட்ரோல் மெட்டீரியலான ஜீ தமிழ் சீரியல்!

கடந்த வாரம் வீரா சீரியலில் வந்த ஒரு காட்சி இப்போது கார்த்திகை தீபம் சீரியலில், கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல் காப்பியடித்துள்ளனர். இதற்கு பலரும் கடுமையான விமர்சித்து வருகின்றனர்.

கடந்த வாரம் வீரா சீரியலில் வந்த ஒரு காட்சி இப்போது கார்த்திகை தீபம் சீரியலில், கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல் காப்பியடித்துள்ளனர். இதற்கு பலரும் கடுமையான விமர்சித்து வருகின்றனர்.

author-image
D. Elayaraja
New Update
Karthigai Deepam Veera

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் தனது அத்தை குடும்பத்தை ஒன்றாக சேர்க்க, டிரைவராக நடிக்கும் கார்த்திக் எதிர்பராதவிதமாக அத்தை மகளை திருமணம் செய்துகொள்கிறார். ஆனால் அத்தை மகள் ரேவதிக்கு பார்த்த மாப்பிள்ளை தன் அண்ணியுடன், தொடர்பில் இருப்பது தெரிந்து கார்த்தியின் அத்தையே இந்த திருமணத்தை நடத்தினார்.

Advertisment

அதே சமயம், மாப்பிள்ளை மகேஷை கடத்தி வைத்திருக்கு அவன் தப்பித்துவிட்டான். இப்போது மகேஷை மீட்க போராடும் அவனது அண்ணி மாயா, ரேவதியை கடத்த திட்டமிட்டு நேற்றைய எபிசோட்டில் அவளை கடத்திவிட்டார், தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் ரேவதியை கடத்தி வந்த மாயா, அவளின் கை மற்றும் கால்களை கட்டி, ஒரு தண்ணீர் தொட்டிக்குள் அடைத்து வைத்து காரத்திக்கு போன் செய்கிறாள்.

ரேவதியை நான் தான் கடத்தி வைத்திருக்கேன், எனக்கு என் மகேஷ் வேணும் இல்லனா ரேவதியை உயிரோட பார்க்க முடியாது என்று அதிர்ச்சி கொடுக்கிறாள்.  மேலும் ரேவதி தண்ணீர் தொட்டிக்குள் அடைக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கும் வீடியோவையும் அனுப்ப கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். இதனால் மாயாவின் சூழ்ச்சியை கார்த்தி எப்படி முறியடிப்பான்?ரேவதியை எப்படி காப்பாற்றுவான் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே சமயம், இந்த சீரியல் தற்போது கடுமையாக விமர்சனங்களையும் சந்தித்துள்ளது.

Advertisment
Advertisements

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு முக்கிய சீரியல் வீரா. குடும்பத்தில் புகுந்த ஒரு வில்லி செய்யும் சூழ்ச்சியை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில், குடும்பத்தின் 2-வது மகனுக்கு திருமணம் நடக்கும்போது சூழ்ச்சி செய்து, வீட்டுக்கு வந்த வில்லி தாலிகட்டிக்கொள்கிறாள். இதனால் மணப்பெண், தற்கொலைக்கு முயன்ற நிலையில், காப்பாற்றப்பட்டார்.

அதன்பிறகு, வில்லி கழுத்தில் தாளி கட்டிய மாப்பிள்ளை தனது காதலியான மணப்பெண் கழுத்திலும் தாலியை கட்டிவிட்டார். தற்போது இருவரும் ஒரே வீட்டில் இருந்து வரும் நிலையில், வில்லியின் சூழ்ச்சி எப்போது தெரியவரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த சீரியலில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, வில்லி, தனது கணவன் 2-வது தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டுபோய், வீட்டு மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் டேங்கில், கை கால்களை கட்டி டேங்கில் இறக்கிவிடுவார்.

அதன்பிறகு வீட்டில் இருக்கும் அனைவரும் இந்த பெண்ணை காணாமல் தேடிக்கொண்டிருக்க, இறுதியாக 3 எபிசோடுகள் கழித்து தண்ணீர் டேங்கில் இருந்து அந்த பெண்ணை வெளியில் எடுப்பார்கள். தற்போது இந்த காட்சி அப்படியே கார்த்திகை தீபம் சீரியலில் மாறியுள்ளது. ஒரு சிறு மாற்றம் கூட இல்லாமல் அப்படியே காப்பியடித்துள்ளனர். தற்போது கார்த்திகை தீபம் சீரியல் ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் மாத்தி யோசிங்கப்பா என்று கூறி வருகின்றனர்.

மேலும், இது ஏற்கனவே செம்பருத்தி, வீரா சீரியல்களில் வந்த காட்சி என்றும், தீபாவயும் இப்படித்தான் தண்ணி தொட்டிக்குள் இருந்து காப்பாற்றினான் கார்த்திக் மறக்க முடியாத காட்சி அன்று இரவு தீபாவுக்கு காய்ச்சல் உணவு ஊட்டி விட்டு தாய் போல பார்த்துக் கொண்டான் என்றும், வீரா சீரியலை பார்த்து காப்பியடிக்காதீங்க என்றும் கூறி வருகின்றனர்.

Zeetamil Serial Karthigai Deepam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: