Advertisment

மகாவுக்கு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்...பழி தீர்க்க சௌந்தரபாண்டி போடும் திட்டம் : அண்ணா, சீதாராமன் அப்டேட்

ஜீ தமிழின் அண்ணா மற்றும் சீதாராமன் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Annam Seetha raman

ஜீ தமிழின் அண்ணா மற்றும் சீதாராமன் எபிசோடு

மகாவுக்கு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்

Advertisment

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.  இந்த சீரியலில் கடந்த வார வெள்ளிக்கிழமை எபிசோடில் வீட்டுக்கு வந்த ராமிடம் மகா டிராமா போட்டு மயங்கி விழுவது போல நடிக்க மதுமிதாவும் சீதாவும் மக்காவுக்கு எதிராக கூட்டணி அமைத்த நிலையில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்

இன்றைய எபிசோட்டில் ஸ்டேஷனுக்கு வரும் மகா இன்ஸ்பெக்ட்டரிடம் எப்படி நீங்க அவங்களை கைது பண்ணலாம், நான் கோர்ட்க்கு போறேன் என ஆவேசப்பட போலீஸ் அவர்கள் இருவரும் கஞ்சா வைத்தது பற்றி பேசிய வீடியோவை காட்ட மகா அதிர்ச்சி அடைகிறாள். அதோடு இல்லாமல் உங்க ஆபிஸ்ல ஏசி இருக்க இடத்துல தான் கேமரா செட் பண்ணி இருக்க மாதிரி இருக்கு என்று சொல்ல மகாவுக்கு துரை மீது சந்தேகம் வருகிறது.

ஆபிஸ் வந்து ஏசி இருக்கும் இடத்தில செக் செய்ய ரகசிய கேமரா இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது. இதனையடுத்து வீட்டுக்கு வரும் மகா பயங்கர கோபத்துடன் துரையை கத்தியால் குத்த வர அர்ச்சனா அவரை கொல்ல வேண்டாம், வீட்டை விட்டு வெளியே அனுப்பு என்று சொல்ல துரை மகா என்னை வெளியே அனுப்ப மாட்டா என்று சொல்ல மகா குறித்த ரகசியம் ஏதோ இருக்கு என்று அர்ச்சனாவுக்கு சந்தேகம் வருகிறது.

seetha raman serial

சீதாராமன் சீரியல்

அதன் பிறகு ராமின் தங்கைகள் அப்பாவை நினைத்து சாப்பிடாமல் இருக்க மகா அவர்களை சமாதானம் செய்கிறாள், மறுபக்கம் ரூமில் தூங்கி கொண்டிருக்கும் ராம் திடீரென எழுந்து கொள்ள சீதா என்ன பாஸ் ஆச்சு என்று கேட்கிறாள், மேலும் நான் இல்லாத போது நீங்க இதே இடத்துல தான் பாட்டு பாடுனீங்க என்று சொல்ல அது எப்படி உனக்கு தெரியும் என்று கேள்வி கேட்கிறான்.

அதெல்லாம் அப்படி தான், எனக்காக திரும்பவும் அந்த பாட்டை பாடுங்க பாஸ் என்று சீதா கேட்க ராம் பாட இதையெல்லாம் வெளியில் இருந்து கேட்கும் மகாவுக்கு கோபம் இன்னும் அதிகமாகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பழி தீர்க்க சௌந்தரபாண்டி போடும் திட்டம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சண்முகத்தை சுட்டுத்தலை கிளம்பிய நிலையில் பாக்கியம் வேண்டாம் அம்மா சொல்லுறதுக்கு கேள்வி என தடுத்து நிறுத்த முயற்சி செய்து அவன் ஆவேசத்துடன் கிளம்ப பரணி போ, நீ நினைக்கிற மாதிரி அவன் ஒன்னும் பழைய சண்முகம் கிடையாது அவன் தங்கச்சிக்கு ஒன்னுனா உன்ன சும்மா விட மாட்டான் என்று சொல்ல முத்துப்பாண்டியும் கொஞ்சம் ஜெர்க்காகிறான்.

அதன் பிறகு சௌந்தரபாண்டி அவனை நான் எதுவும் செய்யாமல் அதுக்கு காரணம் இல்லாம இல்ல, அவன இப்படி எல்லாம் பழி தீர்க்க கூடாது, அதுக்கு என்கிட்ட ஐடியா இருக்கு.. ஆனா அதை இவனுங்க முன்னாடி சொல்ல மாட்டேன், இப்போ சொன்னா அது அப்படியே சமூகத்துக்கு போன் போட்டு சொல்லிட்டு வாங்க என்று முத்துப்பாண்டியை தனியாக அழைத்துச் சென்று தன்னுடைய திட்டத்தை சொல்கிறார்.

அதன் பிறகு ஊர்காரர்கள் சௌந்தரபாண்டி வீட்டுக்கு வந்து சண்முகம் உங்க மேல கைய வச்சு உங்களை அவமானப்படுத்தி இருக்கக் கூடாது அவனை இப்படியே சும்மா விடக்கூடாது என்று பேச சௌந்தரபாண்டி அவங்க மருமகன் தானே இந்த பிரச்சினையை நாங்களே தீர்த்துக்கிறோம் என்ன சொல்ல, ஊர்க்காரர்கள் அப்படியெல்லாம் விட முடியாது என்று சொல்ல சரி நீங்க என்ன நடவடிக்கை எடுக்கிறீர்களோ எடுங்க என சொல்லி விடுகிறார்.

anna serial

அண்ணா சீரியல்

மறுபக்கம் சண்முகம் வழியில் வண்டி ஸ்டார்ட் ஆகாமல் நின்று கொண்டிருக்க பின்னாடி ஒரு கார் வந்து தொடர்ந்து ஹாரன் நடித்துக் கொண்டே இருக்க இவன் கோபப்பட பிறகு பரணி என தெரிய வருகிறது. நீ என்ன இவ்வளவு ஆவேசப்படறேன் பழைய சண்முகம் மாதிரி இல்லையே என சொல்ல உங்க அண்ணன் அப்பாவும் தொடர்ந்து சீண்டிக்கிட்டே இருந்தா என்ன பண்றது என சொல்கிறான்.

சரி வா கார்ல பேசிக்கிட்டே போகலாம் என்று கூப்பிட இது உங்க அப்பாவோட கார் நான் வரல என சண்முகம் சொல்ல இது எங்க அப்பாவோட கார் இல்ல இனோவா கார் என சொல்லி அவனை கட்டாயப்படுத்தி காருக்குள் ஏற்றி அழைத்துச் செல்கிறாள். அப்போது நீ உடனடியா ரத்னாவுக்கு வெங்கடேசை பேசி கல்யாணம் பண்ணி வைக்கிற வேலைய பாரு, ரத்னாவுக்கு ஒரு கல்யாணம் நடந்தால் எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வந்துடும் என சொல்கிறாள். ஆனால் சண்முகம் இப்போதைக்கு கல்யாணத்தைப் பற்றி யோசிக்க போறது கிடையாது என உறுதியாக கூறுகிறான்.

அடுத்ததாக சண்முகம் வீட்டிற்கு வரும் ஊர்காரர்கள் எல்லோரும் அவனுக்காக காத்திருக்க பரணியும் சண்முகமும் காரில் வந்து இறங்குகின்றனர். இதை பார்த்த ஊர்க்காரர்கள் என்ன சண்முகம் சௌந்தரபாண்டி பொண்ணோட வந்து இறங்குகிறான் என யோசிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment