Advertisment

ஏர்டெல், வோடஃபோன் மத்திய அரசுக்கு ரூ. 92,000 கோடி செலுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இந்தத் துறை கடுமையான நிதி அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நேரத்தில் வந்திருக்கும் இத்தீர்ப்பு, ஒட்டுமொத்த துறையின் நம்பகத்தன்மையை மேலும் பலவீனப்படுத்தக்கூடும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bharti Airtel, Vodafone Idea face existential crisis after Supreme court verdict - ஏர்டெல், வோடஃபோன் மத்திய அரசுக்கு ரூ. 92,000 கோடி செலுத்த உத்தரவு

Bharti Airtel, Vodafone Idea face existential crisis after Supreme court verdict - ஏர்டெல், வோடஃபோன் மத்திய அரசுக்கு ரூ. 92,000 கோடி செலுத்த உத்தரவு

ENS Economic Bureau

Advertisment

புதிய தொ‌லைத் தொ‌டர்பு கொள்கையின்படி, வருவாயில் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு தொ‌லைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும். இந்த புதிய கொள்கை வரைவுக்கு வோடபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், வருவாயின் ஒரு பகுதி‌யை மத்திய அரசுக்கு செலுத்தாமல் இழுத்தடித்து வந்தன.

அண்மையில், ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவன‍ங்களிடம், 1 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி திரு. அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த அமர்வு, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள், மத்திய அரசுக்கு 92,641 கோடி ரூபாய் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே, ஜியோ நிறுவனத்தின் கடும் ‍போட்டி காரணமாக, நஷ்டத்தை சந்தித்து வரும் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்கு, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள், நீதிமன்ற உத்தரவு இந்தத் துறைக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், ஒட்டுமொத்தமாக அதன் நம்பகத்தன்மையை பலவீனப்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளன.

"இந்த தீர்ப்பு இந்தியாவின் தொலைத் தொடர்புத் தொழிலுக்கு கணிசமாக பாதிப்பை ஏற்படுத்துகிறது, இந்த துறை ஏற்கனவே பெரும் நிதி அழுத்தத்தின் கீழ் உள்ளது. நான்கு ஆபரேட்டர்கள் மட்டுமே உள்ளனர். உலகத்தரம் வாய்ந்த நெட்வொர்க்குகளை உருவாக்குவதில் பல பில்லியன் டாலர்களின் குறிப்பிடத்தக்க முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இரண்டு தனியார் ஆபரேட்டர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மற்ற பாதித்த ஆபரேட்டர்கள் பெரும்பாலானவர்கள் இந்தத் துறையிலிருந்து வெளியேறிவிட்டனர். தொழில்துறைக்கான நிதி அழுத்தத்தைத் தணிப்பதற்கான வழிகளைக் கண்டறிய இந்த விஷயத்தில் அரசாங்கம் ஈடுபட வேண்டும் என்று நாங்கள் அவசரமாக கேட்டுக்கொள்கிறோம்," என்று வோடபோன் ஐடியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாரதி ஏர்டெல் தனது அறிக்கையில், “இந்தத் துறை கடுமையான நிதி அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நேரத்தில் வந்திருக்கும் இத்தீர்ப்பு, ஒட்டுமொத்த துறையின் நம்பகத்தன்மையை மேலும் பலவீனப்படுத்தக்கூடும். 15 பழைய ஆபரேட்டர்களில், இரண்டு தனியார் துறை ஆபரேட்டர்கள் மட்டுமே இன்று சேவையில் உள்ளனர். இந்த முடிவின் தாக்கத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட தொழில்துறையின் நிதிச் சுமையைத் தணிக்க பொருத்தமான வழிகளைக் கண்டறிய வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளது.

வோடபோன், ஐடியா செல்லுலார் இணைந்துவிட்டன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல், டெலினார் இந்தியா, வீடியோகான் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் லூப் டெலிகாம் ஆகியவை வணிகத்தை நிறுத்திவிட்டன.

வோடபோன் ஐடியாவின் பங்குகள் 26.5 சதவீதம் சரிந்து NSEல் மிகக் குறைந்த அளவாக ரூ .4.10 என்று முடிவடைந்தது. பாரதி ஏர்டெல்லின் பங்குகள் 13 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்து, பங்குச்சந்தை முடியும் நேரத்தில் 3 சதவீதம் உயர்ந்து 371 ரூபாயாக நிறைவடைந்தது. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிதி நிலைமைகளில் மேலும் சரிவு ஏற்பட்டால், இந்தத் துறைக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கடன் கொடுத்த வங்கிகளையும் மோசமாக பாதிக்கலாம்.

தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் உரிம கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை 'வருவாய் பங்கு' வடிவத்தில் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இந்த வருவாய் பங்கைக் கணக்கிட பயன்படுத்தப்படும் வருவாய் தொகை AGR என அழைக்கப்படுகிறது.

DoT இன் படி, கணக்கீடுகள் ஒரு தொலைத் தொடர்பு நிறுவனம், டெலிகாம் அல்லாத மூலங்களான வைப்பு வட்டி மற்றும் சொத்து விற்பனை உட்பட சம்பாதித்த அனைத்து வருவாயையும் இணைக்க வேண்டும் . எவ்வாறாயினும், தொலைத் தொடர்பு சேவைகளிலிருந்து மட்டுமே கிடைக்கும் வருவாயை ஏஜிஆர் கொண்டிருக்க வேண்டும் என்றும் தொலைத் தொடர்பு அல்லாத வருவாயை அதில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்றும் நிறுவனங்கள் கருதுகின்றன.

அதைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டில், டெலிகாம் விவாத தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (டி.டி.எஸ்.ஏ.டி) மூலதன ரசீதுகள் மற்றும் அடிப்படை அல்லாத மூலங்களான வாடகை, நிலையான சொத்துக்களின் விற்பனையின் லாபம், ஈவுத்தொகை, வட்டி மற்றும் இதர வருமானங்கள் தவிர அனைத்து ரசீதுகளையும் ஏ.ஜி.ஆர் உள்ளடக்கியதாக தீர்ப்பளித்தது.

இதற்கிடையில், வருவாயைக் குறைவாகப் புகாரளிக்கும் பிரச்சினையை அரசாங்கம் தொடர்ந்து எழுப்பியது. இந்திய கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (சிஏஜி) ஒரு சமீபத்திய அறிக்கையில், தொலைதொடர்பு நிறுவனங்கள் ரூ .61,064.5 கோடிக்கு "வருவாயைக் குறைப்பதாக" குற்றம் சாட்டின.

DoTன் சமீபத்திய மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது, அதில் நிலுவைத் தொகைக்கு வட்டி, அபராதம் மற்றும் அபராதத்திற்கான வட்டி ஆகியவற்றை டிஓடி கோரியது. இவை ரூ.92,641 கோடியாக என மதிப்பிடப்பட்டது. (disputed actual demand ரூ .23,189 கோடி, ரூ .41,650 கோடி வட்டி வசூலித்தல், ரூ .10,923 கோடி அபராதம், ரூ .16,878 கோடி அபராதத்துக்கான வட்டி).

Supreme Court Of India Vodafone Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment