Advertisment

மத்தியப் பிரதேசத்தில் பரப்புரையை தொடங்கிய காங்கிரஸ்: 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் என்ன?

பிரதமர் பட்ட அவமானங்களை விட பாஜகவின் ஊழல் பட்டியல் பெரியது எனக் கூறிய பிரியங்கா காந்தி, மத்தியப் பிரதேசத்தில் 5 தேர்தல் வாக்குறுதிகளையும் கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Congress launches campaign in Madhya Pradesh What are the five poll promises of the party

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி திங்கள்கிழமை (ஜூன் 12) மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தனது கட்சியின் பரப்புரையை நர்மதா நதிக்கரையில் ஆரத்தி நடத்தி தொடங்கி, ஜபல்பூர் பேரணியில் உரையாற்றினார்.

Advertisment

பிரியங்கா தனது உரையில், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மாநில பாஜக அரசு "ரிஷ்வத் ராஜ் (லஞ்சம் ராஜ்)" நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து, "மத்திய பிரதேசத்தில் ஊழல், ரேஷன் ஊழல், உதவித்தொகை ஊழல், வியாபம் ஊழல், போலீஸ் ஊழலுக்கான ஆட்சேர்ப்பு போன்ற பல ஊழல்கள் உள்ளன. மின்சாரத் துறை ஊழல், கோவிட் ஊழல், இ-டெண்டர் ஊழலும் உள்ளது” என்றார்.

இந்த மத்தியப் பிரதேசத்தின் ஊழல், பிரதமரின் அவமானப் பட்டியலை விட பெரியது” என்றார்.

தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், முன்னாள் முதல்வர் கமல்நாத் சமீபத்தில் அறிவித்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும் காங்கிரஸ் தலைவர் கூறினார்.

கடந்த மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் அமோக வெற்றியைப் பதிவு செய்ய உதவிய கர்நாடக டெம்ப்ளேட்டைப் பின்பற்றி காங்கிரஸ் இந்த வாக்குறுதிகளை வெளியிட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் ஐந்து தேர்தல் வாக்குறுதிகள் என்ன?

பெண்களுக்கு ரூ.1,500 மாத ஊதியம், ரூ.500க்கு காஸ் சிலிண்டர் வழங்குவது உள்ளிட்ட 5 தேர்தல் வாக்குறுதிகளில் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கும்.

இலவச 100 யூனிட் மின்சாரம் மற்றும் 200 யூனிட்டுகளுக்கு மின்கட்டணத்தை பாதியாக குறைத்தல், பழைய ஓய்வூதிய திட்டம் அறிமுகம், விவசாயிகளின் கடன் தள்ளுபடி ஆகியவற்றையும் பிரியங்கா கூறினார்.

இந்த உறுதிமொழிகளை அறிவிக்கும் போது, பிரியங்கா பாஜக தேர்தல் வாக்குறுதிகள் எதையும் அறிவிக்கவில்லை என்றார். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது, 2018 மற்றும் 2022 க்கு இடையில், தனது கட்சி "நிறைய வேலைகளையும் வளர்ச்சியையும்" செய்தது என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து, பிஜேபியின் "தவறான" வாக்குறுதிகளில் மக்கள் வீழ்ந்து விடக் கூடாது” என்றார். கர்நாடகாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் அரசு, பிரச்சாரத்தின் போது உருவாக்கப்பட்ட 5 திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கான பாதையில் ஏற்கனவே உள்ளது என்றும் பிரியங்கா சுட்டிக்காட்டினார்.

சொகுசு மற்றும் ஏசி வகுப்புகள் தவிர அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாகப் பயணம் செய்யும் சக்தி திட்டத்தை முதல்வர் சித்தராமையா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார் என்பதையும் அவர் கூறினார்.

ஏற்கனவே அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் க்ரிஹ ஜோதி திட்டம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில்,ஆகஸ்ட் 17-18 தேதிகளில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெண்ணுக்கு 2,000 ரூபாய் க்ரிஹ லட்சுமி திட்டம் தொடங்கப்பட உள்ளது.

தொடர்ந்து, அன்ன பாக்யா திட்டத்தில் பிபிஎல் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் அந்தியோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கும் 10 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும்.

மேலும் யுவ நிதி திட்டத்தில் பதிவு செய்த நாளிலிருந்து 24 மாதங்களுக்கு வேலையில்லாத் தொகையாக ரூ. 3,000 மற்றும் டிப்ளமோ வைத்திருப்பவர்களுக்கு ரூ. 1,500 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madhya Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment