Advertisment

புதிய மின் கட்டண முறை: பகலில் குறைவு, இரவில் அதிகம்; நுகர்வோரை எப்படி பாதிக்கும்?

உண்மையான தேவை நிலைமைகளுக்கு ஏற்ப நிகழ்நேர அடிப்படையில் மின் கட்டணங்கள் தீர்மானிக்கப்படுகிறது. இதில் வேறு சில வகைகளும் உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
time-of-day power tariffs, ToD power tariffs, what is time-of-day power tariffs, நாள் நேர மின் கட்டண கணக்கீடு முறை, ஒரே நாளில் வேறுபட்ட மின் கட்டண கணக்கீடு முறை நோக்கி நகர்வு; நுகர்வோரை எவ்வாறு பாதிக்கும்?, what is ToD power tariffs, ToD power tariffs impact, indian express, express explained

ஒரே நாளில் வேறுபட்ட மின் கட்டண கணக்கீடு முறை நோக்கி நகர்வு; நுகர்வோரை எவ்வாறு பாதிக்கும்?

ஒரே நாளில் பகல் மற்றும் இரவு நேரங்களின் அடிப்படையில் மின்சாரக் கட்டணங்களை வெளியிடுவதற்கான நகர்வை நோக்கி மத்திய அரசு சமிக்ஞை செய்துள்ளது. இது பகல் நேரத்தில் எட்டு மணி நேரம் மின்சாரத்தை தள்ளுபடி விலையிலும் உச்ச மின் நுகர்வு நேரங்களில் பிரீமியம் அல்லது அதிக விலை கட்டணத்தையும் கொண்டிருக்கும். மத்திய மின் அமைச்சகம் கடந்த வாரம் மின்சாரம் (நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020-ல் திருத்தங்களை அறிவித்தது. மேலும், இந்த மாற்றங்களில் பகல் நேர (ToD) கட்டண விதிகளை அறிமுகப்படுத்தியது.

Advertisment

பெரிய அளவில், நேர அடிப்படையிலான மின் கட்டண கட்டமைப்புகள் நிலையானதாக இருக்கலாம் - நேரங்களின் அடிப்படையில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட மின் கட்டணங்கள் - அல்லது மாறும் கட்டணங்கள் - உண்மையான தேவை நிலைமைகளுக்கு ஏற்ப நிகழ்நேர அடிப்படையில் மின் கட்டணங்கள் தீர்மானிக்கப்படுகிறது. இதில் வேறு சில வகைகளும் உள்ளன. ஆனால், அவை நிலையான மற்றும் மாறும் விலை மாதிரிகளின் கலவையாகும். மத்திய அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் ஒரே நாளில் நேர அடிப்படையிலான மின் கட்டணங்கள் நிலையானதாக இருக்கும், அதாவது அவை ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களுக்கு கட்டணம் முன்கூட்டியே தீர்மானிக்கப்படும்.

பகல் நேர கட்டண விதிமுறைகள் - விவரம்

பகல் நேர கட்டண முறையின் கீழ், அந்தந்த மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் (SERC) குறிப்பிட்டுள்ளபடி, “பகல் நேரம்” - ஒரு நாளில் 8 மணி நேர மின் கட்டணம் - பகலில் சாதாரண கட்டணத்தை விட குறைந்தபட்சம் 20 சதவீதம் குறைவாக இருக்கும். மறுபுறம், வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கான சாதாரண கட்டணத்தை விட, மின் நுகர்வு உச்சகட்ட நேரத்தில் கட்டணங்கள் குறைந்தபட்சம் 20 சதவீதம் அதிகமாக இருக்கும். மற்ற நுகர்வோருக்கு குறைந்தபட்சம் 10 சதவீதம் அதிகமாக இருக்கும்.

2024 ஏப்ரல் 1 முதல் அதிகபட்சமாக 10 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் தேவை உள்ள வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கும் மற்றும் விவசாய நுகர்வோர் தவிர மற்ற அனைத்து நுகர்வோருக்கும், ஏப்ரல் 1, 2025 முதல் இது பொருந்தும். ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு, ஸ்மார்ட் மீட்டர்கள் உள்ள நுகர்வோருக்கு பகல் நேர மின் கட்டண முறை உடனடியாக அமலுக்கு வரும் என மின் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பகல் நேர மின் கட்டண முறைக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் ஒரு முன்நிபந்தனையாகும்.

திருத்தப்பட்ட விதிகள் பகல் நேரத்தை விட உச்ச மின் நுகர்வு மணிநேரத்தை தடை செய்கிறது, இது எட்டு மணிநேரமாக இருக்கும்.

அரசாங்கத்தின் கருத்துப்படி, பெரும்பாலான மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களால் (SERC) ஏற்கனவே பெரிய வணிக மற்றும் தொழில்துறை வகை நுகர்வோருக்கு ப்கல் நேர கட்டணங்களை செயல்படுத்தியுள்ளன. மேலும், ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதன் மூலம், உள்நாட்டு நுகர்வோர் மட்டத்தில் பகல் நேர மின் கட்டண அளவிடும் முறை அறிமுகப்படுத்தப்படும்.

மேலும், மின் விநியோக நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் ஒவ்வொரு வகை நுகர்வோருக்கான கட்டணங்களையும் காட்ட வேண்டும். மேலும், கட்டணத்தில் மாற்றம் ஏற்பட்டால், குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பே நுகர்வோருக்கு அறிவிக்கப்பட வேண்டும்.

பகல் நேர மின் கட்டணங்களின் சாதகமான நன்மைகள்

மத்திய மின்சாரம் மற்றும் புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே. சிங், பகல் நேர கட்டண முறையை நுகர்வோர் மற்றும் நாட்டின் மின் அமைப்பிற்கான வெற்றி வெற்றி முன்மொழிவு என்று கூறினார். உச்ச மின் நுகர்வு நேரம், பகல் நேரம் மற்றும் சாதாரண மணிநேரங்களுக்கு தனித்தனியான கட்டணங்கள் என்ற பகல் நேர (TOD) கட்டணங்கள், இந்த கட்டணத்தின்படி தங்கள் மின் சுமையை நிர்வகிக்க நுகர்வோருக்கு விலை சமிக்ஞைகளை அனுப்புகின்றன. பகல் நேர கட்டண முறையை விழிப்புணர்வுடன் திறம்பட பயன்படுத்துவதன் மூலம், நுகர்வோர் தங்கள் மின் கட்டணத்தை குறைக்க முடியும். சூரியசக்தி மின்சாரம் மலிவானது என்பதால், பகல் நேரத்தில் கட்டணம் குறைவாக இருக்கும். அதனால், நுகர்வோர் பயனடைவார்கள்” என்று மத்திய அமைச்சர் கூறினார்.

பகல் இல்லாத நேரங்களில், பெரும்பாலும் அனல், நீர் மற்றும் எரிவாயு அடிப்படையிலான மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இது சூரிய சக்தியை விட ஒப்பீட்டளவில் விலை அதிகம். எனவே, சூரியஒளி இல்லாத நேரங்களில் கட்டணங்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். இது மின்சாரத்தின் அதிக செலவைப் பிரதிபலிக்கிறது. உச்ச மின் நுகர்வு நேரத்தைப் பொறுத்தவரை, சாதாரண கட்டணங்களைவிட அதிகமான கட்டணங்களுடன் மின் விநியோகத்தில் அதிக சுமைகளை வைப்பதில் இருந்து குறைக்க நுகர்வோரை ஊக்கப்படுத்த அரசாங்கம் நம்புகிறது. உச்ச மின் நுகர்வு நேரங்களில் மின் விநியோக சுமை குறையும் பட்சத்தில், பராமரிப்பு மற்றும் மேம்படுத்தலுக்கான மின் உற்பத்தி மற்றும் விநியோக உள்கட்டமைப்பில் கூடுதல் முதலீடுகளுக்கான தேவை நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு குறைகிறது.

நாட்டின் மின்சார உற்பத்தி விநியோகத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை சிறந்த முறையில் ஒருங்கிணைப்பதற்கு பகல் நேர கட்டண முறை (ToD) வழிவகுக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இது இந்தியாவின் ஆற்றல் மாற்றத்தை விரைவுபடுத்தும். “பகல் நேர கட்டணமானது புதுப்பிக்கத்தக்க உற்பத்தி ஏற்ற இறக்கங்களை நிர்வகிப்பதை மேம்படுத்தும், அதிக புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நேரங்களின் போது தேவை அதிகரிப்பை ஊக்குவிக்கும், அதன் மூலம் அதிக அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விநியோக ஒருங்கிணைப்பை அதிகரிக்கும்” என்று சிங் கூறினார்.

நுகர்வோர்களுக்கு என்ன பயன்?

இந்த நடவடிக்கை நுகர்வோர் தங்கள் மின்சார பயன்பாட்டைத் திட்டமிடுவதற்கும் மேம்படுத்துவதற்கும் சில நெகிழ்வுத்தன்மையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் அவர்களின் மின்சார பயன்பாட்டில் பெரும் பங்கு தள்ளுபடி மின்சார கட்டண நேரத்தில் வரும். இந்த நடவடிக்கையின் நோக்கம் நுகர்வோர்கள் தங்கள் மின் நுகர்வுகளை, குறிப்பாக உச்ச மின் நுகர்வு நேரத்தில் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு ஊக்கமளிப்பதே ஆகும். இது ஒரு முக்கிய தேவையான பக்கம் நிர்வகிக்கும் (DSM) கருவியாகும். இது இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் அதிகரித்து வரும் மின் உற்பத்திக்கு சிறந்த மின் விநியோக ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மின்துறை அமைச்சகம் கூறுகையில், பகல் நேர கட்டணங்கள் உலக அளவில் ஒரு முக்கிய டி.எஸ்.எம் நடவடிக்கையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது நுகர்வோர் தங்கள் தேவையின் ஒரு பகுதியை உச்ச மின் நுகர்வு நேரத்தில் இருந்து உச்ச மின் நுகர்வு அல்லாத நேரத்துக்கு மாற்றுவதை ஊக்குவிக்கும் வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகிறது.

குறைந்தபட்சம் 17 ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உட்பட சுமார் 20 நாடுகள், பகல் நேர மின் கட்டண கணக்கீடு முறை அல்லது வேறு ஒரு வகையில் நேர அடிப்படையிலான மின் கட்டணக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன.

ஆனால் பகல் நேர கட்டணங்களின் வெற்றி, குறிப்பாக நுகர்வோர் மட்டத்தில், யூனிட் மட்டத்தில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் மீட்டரிங் தொடர்கிறது. மேலும், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள பயனர்கள் தங்கள் நுகர்வு முறைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். தொழில்துறை மற்றும் வணிக அலகுகள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள உள்நாட்டு பயனர்கள் போன்ற பெரிய பயனர்களுக்கு இது முன்னதாக இருக்கலாம். ஆனால், முழு பயிற்சிக்கும் நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் விநியோக பயன்பாடுகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு ஒரு புதிய அணுகுமுறை தேவை.

மின் விநியோக மேலாண்மை கருவி

நிலக்கரி எரிபொருட்கள் அல்லது புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களிலிருந்து சராசரியாக 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி விநியோகம் சராசரியாக 1,000 மெகாவாட் கூடுதலாகச் செயல்படுவதற்கு, சாத்தியமான ஆற்றல் சேமிப்பு விருப்பங்களை உருவாக்குவதற்கு இந்தியா அவசரமாக வேலை செய்ய வேண்டும் என்று கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உலகின் மூன்றாவது பெரிய உற்பத்தியாளராக உள்ள இந்தியாவில், நிறுவப்பட்ட மின்சாரத் திறனில் கிட்டத்தட்ட 40 சதவீதம் நிலக்கரி எரிபொருள் மூலங்களிலிருந்து வருகிறது. இந்த பசுமை உந்துதல் 2005 மற்றும் 2016 க்கு இடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வு தீவிரத்தில் கூர்மையான 24 சதவீதம் குறைப்பை ஏற்படுத்தியது. ஆனால், இது புதுப்பிக்கத்தக்க சக்திகளால் இயக்கப்படும் ஒரு மின் உற்பத்தி விநியோக சவால்களையும் எழுப்பியுள்ளது.

மின் விநியோக பயன்பாட்டிற்கான லித்தியம்-அயன் சேமிப்பக பேட்டரி வாய்ப்பு இப்போது சாத்தியமில்லாதது என்று நிராகரிக்கப்பட்டாலும், குறைந்தபட்சம் இப்போதைக்கு, சூரிய மற்றும் காற்று அடிப்படையிலான மின்சார உற்பத்தியின் திசையில் வளர்ந்து வரும் கொள்கை உந்துதலை தொடர்ந்து போராடும் மின்சார விநியோக நிறுவனங்களுக்கு அல்லது அல்லது டிஸ்காம்களுக்கு தள்ள முடியாது. SECI (சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்) - சூரியசக்தி ஏலங்களை நடத்தும் அரசுக்கு சொந்தமான நிறுவனமானது - புதுமைக்கான வாய்ப்புகள் இல்லாமல், பசுமையான டெவலப்பர்களை உள்ளடக்கிய பல ஒப்பந்தங்களை கடுமையான PPA-களில் (மின் கொள்முதல் ஒப்பந்தங்கள்) பூட்டியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

புதுப்பிக்கத்தக்க சக்தி மின் உற்பத்தியில் உள்ள மாறுபாட்டை முதன்மையாக சமநிலைப்படுத்த, பசுமை எரிசக்தி ஆதாரங்களுடன் ஆற்றல் சேமிப்பு தேவைப்படுகிறது - சூரிய வெயில் இருக்கும் பகல்நேரத்தின் போது அல்லது காற்று வீசும் போது மட்டுமே மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இது எப்போதும் தேவை சுழற்சியுடன் ஒத்திசைவதில்லை. புதுப்பிக்கத்தக்க மின்சாரங்களுடன் தொடர்புடைய இந்தக் குறைபாட்டைப் போக்க இந்த சேமிப்பு உதவும்.

அரசுக்கு சொந்தமான மின் விநியொக நிறுவனங்கள் போன்ற கொள்முதல் செய்பவர்களுக்கு, மின் உற்பத்தி போக்குகளில் உள்ள இந்த மாறுபாடுகளின் காரணமாக, புதுப்பிக்கத்தக்க மின்சாரம் எப்போதும் சாத்தியமான விருப்பமாக இருக்காது. அதாவது அடிப்படை சுமை தேவையை பூர்த்தி செய்வதற்கு வெப்ப அல்லது அணுசக்தி உற்பத்தியை அவர்கள் இன்னும் சார்ந்திருக்க வேண்டும். சாத்தியமான சேமிப்பக விருப்பத்துடன் இணைக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரம் இந்த சிக்கலை சமாளிக்க உதவுகின்றன.

இப்போது அரசாங்கத்தால் இரண்டு மாற்று வழிகள் உள்ளன: ஹைட்ரஜன் மற்றும் கலப்பின உற்பத்தி மாதிரிகள் ஆஃப் ஸ்ட்ரீம் பம்ப் செய்யப்பட்ட சேமிப்பகத்துடன் கலக்கப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மாற்றத்தின் மறைக்கப்பட்ட சவால்கள் மிகவும் உறுதியானதாக வெளிப்படும் என்பதால், அரசாங்கம் இரண்டு தொழில்நுட்பங்களிலும் புதுப்பிக்கப்பட்ட உந்துதலைச் செய்கிறது. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், எரிசக்தியாக அதன் திறனைப் பயன்படுத்தவும் ஒரு கொள்கை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மத்திய மின் அமைச்சகம் அனைத்து பம்ப் செய்யப்பட்ட ஹைட்ரோ தளங்களின் கணக்கெடுப்பை முடித்துள்ளது மற்றும் ஹைட்ரோ பொதுத்துறை நிறுவனங்களுக்கு பம்ப் செய்யப்பட்ட ஹைட்ரோ திட்டங்களை எடுக்க இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி சுரங்கங்களை எதிர்காலத்தில் பம்ப் செய்யப்பட்ட ஹைட்ரோலுக்கு சாத்தியமான இடமாக கருதுவதற்கு மத்திய நிலக்கரி அமைச்சகத்திற்கு மின்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

புதுப்பிக்கத் தக்க மின் ஆற்றலை ஒருங்கிணைப்பதில் உள்ள தடைகள்

உற்பத்தி கலவையில் வளர்ந்து வரும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் திறனை பூர்த்தி செய்ய எரிவாயு விசைகளை இயக்க இயற்கை எரிவாயு கிடைக்காதது முக்கிய சவாலாகும். 200 மெகாவாட் வரிசையில் நிலக்கரி அடிப்படையிலான இந்தியாவின் பரந்த மின் உற்பத்தி நிலையங்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலானவை. பழைய தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன, வலுவான நம்பகத்தன்மையை உறுதியளிக்கவில்லை. மேலும், இந்தியாவின் சுமை தேவை நிறைவுற்றதாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, காலாவதியான நிலக்கரி அடிப்படையிலான ஆலைகளுக்குப் பதிலாக, மொத்த மாற்றத்திற்கான இடைநிலை இலக்காக, சூப்பர் கிரிட்டிகல் உயர் திறன் கொண்ட நிலக்கரி அடிப்படையிலான ஆலைகளை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. எப்படியானாலும், வரவிருக்கும் காலநிலை நெருக்கடியைக் கருத்தில் கொண்டு சர்வதேச சமூகத்தால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டின் தற்போதைய நிறுவப்பட்ட உற்பத்தி திறன் சுமார் 410 ஜிகாவாட் (1 ஜிகாவாட் என்பது 1,000 மெகாவாட்) அதிகபட்ச தேவை 229 ஜிகாவாட் ஆகும். நிறுவப்பட்ட திறனில், புதைபடிவமற்ற எரிபொருள் அடிப்படையிலான எரிசக்தி ஆதாரங்களில் இருந்து நிறுவப்பட்ட மொத்த மின்சாரம் 179 ஜிகாவாட் ஆகும். இது மொத்த மின்சார உற்பத்தி திறனில் 40 சதவீதத்திற்கும் அதிகமாகும். முதன்மையாக சூரிய மற்றும் காற்று மின் உற்பத்தியாகும். இடைநிலையை ஈடுசெய்ய, பம்ப் செய்யப்பட்ட-சேமிப்பு நீர்மின் நிலையங்கள் - இது பொதுவாக குறைந்த உயரத்தில் உள்ள நீர்த்தேக்கத்திலிருந்து அதிக உயரமான நீர்த்தேக்கத்திற்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கிடைக்கும்போது, பின்னர் வெளியிடப்படும் நீரின் ஈர்ப்பு ஆற்றல் வடிவில் ஆற்றலைச் சேமிக்கிறது. புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி கிடைக்காத போது மின்சாரம் தயாரிக்க ஒரு விசையை நகர்த்துவது - மிகவும் சாத்தியமான மாற்றாகக் கருதப்படுகிறது.

டி.எஸ்.எம் கருவிகள் அடிப்படையில் மின் விநியோக மேலாளர்கள் மற்றும் கொள்கை திட்டமிடுபவர்களுக்கு இந்த சேமிப்பக சிக்கல்கள் உறுதியான முறையில் தீர்க்கப்படும் வரை புதுப்பிக்கத் தக்க மின் ஆற்றல் ஒருங்கிணைப்பில் இந்த பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment