தேர்தல் ஆணையத்தின் புதிய அணுகுமுறை: நாடு தழுவிய ’வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்’ பீகார் சர்ச்சையில் இருந்து எப்படி வேறுபடுகிறது?

ஒரு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளி இப்போது சென்னையில் வாக்காளராகப் பதிவு செய்திருந்தால், அவரது பெயர் அல்லது அவரது பெற்றோர்/உறவினர் பெயர் மேற்கு வங்கத்தின் 2002 வாக்காளர் பட்டியலில் இருந்தால் போதும்.

ஒரு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளி இப்போது சென்னையில் வாக்காளராகப் பதிவு செய்திருந்தால், அவரது பெயர் அல்லது அவரது பெற்றோர்/உறவினர் பெயர் மேற்கு வங்கத்தின் 2002 வாக்காளர் பட்டியலில் இருந்தால் போதும்.

author-image
abhisudha
New Update
SIR electoral roll, Election Commission changes, voter list revision, citizenship verification,

Nationwide SIR of electoral roll| Election Commission| Voter list revision| Citizenship verification

எழுதியவர்கள்: தாமினி நாத், ரிதிகா சோப்ரா

இந்தியத் தேர்தல் ஆணையம் (EC), வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது மற்றும் சரிபார்ப்பது குறித்த விதிமுறைகளில் மாபெரும் மாற்றங்களை அறிவித்துள்ளது. பீகாரில் நடந்த முந்தைய சீராய்வுப் பணியில் (SIR) இருந்த இறுக்கம் மற்றும் குழப்பம், அக்டோபர் 28 முதல் 12 மாநிலங்களில் தொடங்கும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திவிர திருத்தத்தில் (SIR) முழுமையாகத் தளர்த்தப்பட்டுள்ளது.

Advertisment

வாக்காளர்களை நீக்குவதை விட, இணைப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்த புதிய நடைமுறையில், குறிப்பாகப் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்குப் பல புதிய வசதிகள் கிடைத்துள்ளன.

1. 'சரிபார்ப்பு இல்லை, இணைப்பே குறிக்கோள்!' 

பீகார் சிறப்பு திவிர திருத்தத்தில் (SIR), 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்த வாக்காளர்கள் தங்கள் பெயரைக் காப்பாற்ற வயது மற்றும் குடியுரிமை ஆவணங்களைச் சமர்ப்பிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இது வாக்காளர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

புதிய விதி என்ன?

நாடு தழுவிய இந்தச் சீராய்வின் எண்ணிக்கை எடுத்தல் (Enumeration) கட்டத்தில் ஆவணச் சரிபார்ப்பு என்பதே இல்லை.

Advertisment
Advertisements

பழைய இணைப்புப் போதும்: தற்போதுள்ள வாக்காளர்கள், தங்கள் பெயரோ அல்லது தங்கள் பெற்றோர்/உறவினர்களின் பெயரோ கடைசியாகச் செய்யப்பட்ட சிறப்பு தீவிர திருத்த (SIR) பட்டியலில் எங்கே இடம்பெற்றிருந்தது என்ற அடிப்படைத் தகவலை மட்டும் தந்தால் போதுமானது. இதன் மூலம், பட்டியலில் அவர்களின் தொடர்ச்சியை எளிதாக உறுதிப்படுத்த முடியும்.

2. மாநில எல்லைகள் தடையல்ல: 

மிகவும் சர்ச்சைக்குரிய விதியாக இருந்த 'மாநில எல்லை' கட்டுப்பாடு இந்த முறை நீக்கப்பட்டுள்ளது.

எந்த மாநிலப் பட்டியலையும் பயன்படுத்தலாம்: ஒரு வாக்காளர், தற்போது வசிக்கும் மாநிலத்தின் முந்தைய சீராய்வுப் பட்டியலுடன் இணைப்பை நிரூபிக்க முடியாவிட்டால், இந்தியாவில் உள்ள எந்தவொரு மாநிலத்தின் கடைசியாகச் செய்யப்பட்ட சீராய்வுப் பட்டியலையும் பயன்படுத்த இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளது!

  • உதாரணம்: ஒரு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளி இப்போது சென்னையில் வாக்காளராகப் பதிவு செய்திருந்தால், அவரது பெயர் அல்லது அவரது பெற்றோர்/உறவினர் பெயர் மேற்கு வங்கத்தின் 2002 வாக்காளர் பட்டியலில் இருந்தால் போதும், அவர் தமிழ்நாட்டில் வாக்காளராக நீடிக்கத் தகுதி பெறுவார்.

சாவடி நிலை அதிகாரிகளுக்கு அதிகாரம்: சாவடி நிலை அதிகாரிகள் (BLOs) இப்போது அனைத்து மாநிலங்களின் முந்தைய சீராய்வுப் பட்டியல்களையும் பார்க்க முடியும். இது பீகாரில் இருந்த அதிகாரிகளுக்கு இருந்த கட்டுப்பாடுகளை உடைக்கிறது.

3. குடியுரிமைச் சோதனையில் மென்மை!  

குடியுரிமைச் சரிபார்ப்பு குறித்துத் தேர்தல் ஆணையம் கையாண்ட இறுக்கமான அணுகுமுறை தளர்த்தப்பட்டுள்ளது.

குடியுரிமை என்பது இன்னும் தகுதி அளவுகோலாக இருந்தாலும், அது இனி ஒரு முக்கியச் சோதனையாக (Central Test) வலியுறுத்தப்படாது.

ஆவணம் சமர்ப்பிப்பு எப்போது? கடந்த சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறையின் போது எந்த மாநிலத்தின் வாக்காளர் பட்டியலிலும் தங்கள் பெயரைக் கொண்டிராதவர்களுக்கு மட்டுமே இப்போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். பீகாரில் 2003-க்குப் பிறகு பதிவு செய்த பெரும்பாலான வாக்காளர்கள் ஆவணம் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது, ஆனால் இப்போது இந்த விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

ஆதார்: உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு பீகார் சீராய்வில் 12வது ஆவணமாகச் சேர்க்கப்பட்ட ஆதார், இந்த 12 மாநிலங்களுக்கான ஆவணப் பட்டியலிலும் தொடர்கிறது.

புதிய விண்ணப்பதாரர்களுக்கு உடனடிப் பதிவு: புதிதாக 18 வயதை எட்டியவர்கள் தங்கள் படிவம் 6-ஐ (வாக்காளர் பதிவுப் படிவம்) எண்ணிக்கைக் எடுக்கும் கட்டத்திலேயே உடனடியாகச் சமர்ப்பிக்கலாம். இது பீகாரில் இருந்த தாமதத்தை நீக்கியுள்ளது. 

4. அரசியல் கட்சிகள் தொடக்கம் முதலே பங்குதாரர்கள்! 

பீகார் சீராய்வு அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் இயந்திரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இந்த இரண்டாம் கட்டப் பணி தொடங்கும்போதே அரசியல் கட்சிகளுடன் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

  • தேர்தல் அதிகாரிகள் செயல்முறையை விரிவாக விளக்கி, கட்சிகளைத் தொடக்கம் முதலே பங்குதாரர்களாக இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மாற்றங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுவிடுமோ என்ற அச்சம் நீங்கி, அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் எளிதாகவும், வெளிப்படையாகவும் தங்களை இணைத்துக் கொள்ள ஒரு தெளிவான பாதை ஏற்பட்டுள்ளது. உங்கள் பெயரும், உங்கள் உறவினர்களின் பெயரும் பட்டியலில் இருக்கிறதா என்பதை உடனே சரிபாருங்கள்!

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!

Election Commission

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: