Advertisment

கொரோனா வீழ்ச்சிக்குப் பிறகு அதிகரிக்கும் உடல் உறுப்பு தானம், ஆனால் நிபுணர்கள் எதிர்பார்ப்பு என்ன?

2021 இல் உடல் உறுப்பு தானங்களில் தெலுங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

author-image
WebDesk
New Update
india

Organ donations rise after Covid-19 dip: What do the numbers show?

கொரோனா தொற்றுநோயின் வீழ்ச்சிக்குப் பிறகு, 2021 இல் உறுப்பு தானம் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்தது.

Advertisment

எவ்வாறாயினும், இறந்தவர்களின் தானம் – மூளை செயலிழப்பு அல்லது மாரடைப்பால் இறந்தவர்களின் உறவினர்களால் தானம் செய்யப்பட்ட உறுப்புகள் – உயிருடன் இருப்பவர்களின் உறுப்பு தானங்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே உள்ளது என்று நாடாளுமன்றத்தில் அரசாங்கம் வழங்கிய தரவு காட்டுகிறது.

எண்கள் எதைக் காட்டுகின்றன?

12,387 உறுப்புகளில் சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் கணையம் போன்றவை 2021 இல் தானம் செய்யப்பட்டது. இதில் 1,743 மட்டுமே இறந்த நன்கொடையாளர்களிடமிருந்து வந்தது.

2021 இல் தானம் செய்யப்பட்ட மொத்த உறுப்புகளில் 14.07% மட்டுமே இறந்த நன்கொடையாளர்களிடமிருந்து வந்தவை, இது 2019 இன் 16.77% ஐ விட மிகக் குறைவு. இறந்த நன்கொடைகளின் விகிதம் - 2017 மற்றும் 2018 இல் இன்னும் அதிகமாக இருந்தது.

2021 இல் உடல் உறுப்பு தானங்களில் தெலுங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. உறுப்பு தானத்தில் இவை மொத்தத்தில் 85% க்கும் அதிகமாகும். இதற்கு காரணம், பெரும்பாலான உறுப்பு மாற்று மற்றும் தான மையங்கள் இந்த புவியியல் பகுதிகளில் குவிந்துள்ளன.

இதுகுறித்து தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் (NOTTO) இயக்குனர் டாக்டர் கிரிஷன் குமார், இறந்தவர்களின் உறுப்பு தானம் எண்ணிக்கை மெதுவாக தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு உயர்ந்து வருவதாக கூறினார். ஆனால், உயிருள்ள நன்கொடையாளர்களிடமிருந்து உறுப்புகளைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 80 சதவீத மாற்று அறுவை சிகிச்சையின் தற்போதைய போக்கை மாற்றியமைப்பதே எங்கள் நோக்கம், என்று அவர் கூறினார்.

இறந்தவர்களின் உறுப்புகளை தானம் செய்வதை ஏன் அதிகரிக்க வேண்டும்?

உலகில் மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான மாற்று அறுவை சிகிச்சைகளை இந்தியா நடத்துகிறது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் 1.5-2 லட்சம் நபர்களில், சுமார் 8,000 பேருக்கு மட்டுமே சிகிச்சை செய்யப்படுகிறது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் 80,000 பேரில், 1,800 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். மேலும் இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் 10,000 பேரில், 200 பேருக்கு மட்டுமே அது கிடைக்கிறது.

வாழ்க்கை முறை நோய்கள் அதிகரித்து வருவதால் தேவை அதிகரித்து வருகிறது. மேலும், இதயம் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளை இறந்த நன்கொடையாளர்களிடமிருந்து மட்டுமே மீட்டெடுக்க முடியும்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் 1.5 லட்சம் பேர் இறக்கின்றனர், அவர்களில் பலர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியும். இதயம் வேலை செய்வதை நிறுத்திய பிறகு தானம் செய்யலாம் என்றாலும், மூளை இறப்பு அடைந்தவர்களிடம் இருந்து கிட்டத்தட்ட அனைத்து உறுப்புகளும் தற்போது தானம் செய்யப்படுகின்றன.

இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு சுமார் 0.52 உடல் உறுப்பு தான விகிதம் உள்ளது. ஒப்பிடுகையில், ஸ்பெயினில் உறுப்பு தானம் விகிதம், ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 49.6 என உலகிலேயே மிக அதிகமாக உள்ளது.

இறந்த நன்கொடைகளை எவ்வாறு அதிகரிக்க முடியும்?

இதய மரணம் அடைந்தவர்களிடமிருந்து உறுப்புகளை தானம் செய்வது - மூளை இறப்புக்கு பதிலாக - எண்ணிக்கையை அதிகரிக்கலாம். இருப்பினும், இதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

மகாராஷ்டிரா ரோட்டோ-சோட்டோ (பிராந்திய மற்றும் மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு) மாற்று ஒருங்கிணைப்பாளர் கல்பேஷ் மத்ரே விளக்கியது போல், உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் இரத்த ஓட்டம் நிறுத்தப்படுவதால் இதய இறப்புக்குப் பிறகு உறுப்புகளை மிக விரைவாக தானம் செய்ய வேண்டும்.

இருப்பினும், இந்தியாவில், குடும்ப உறுப்பினர்களுக்கு இறப்பு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதற்குள், அது மிகவும் தாமதமாகிவிடும்.

டாக்டர் கிரிஷன் குமார் விழிப்புணர்வின் அவசியத்தையும் வலியுறுத்தினார். இந்தியாவில் உள்ள மக்கள் தன்னலமற்றவர்கள், நமக்கு தேவையானது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றி அதிக விழிப்புணர்வு இருப்பதால் மக்கள் தங்களை நன்கொடையாளர்களாக பதிவு செய்ய வேண்டும்.

விழிப்புணர்வை அதிகரிக்க நாங்கள் வழக்கமாக நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறோம்; பள்ளிக் குழந்தைகளையும் அணுக ஆரம்பித்துள்ளோம். தானம் செய்யப்பட்ட உறுப்புகள் உண்மையில் மற்றவர்களுக்கு உதவுகின்றன என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருக்க வேண்டும், மேலும் அந்த நம்பிக்கையை வளர்ப்பதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம், என்று அவர் கூறினார்.

கூடுதலாக, நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே நல்ல போக்குவரத்து நெட்வொர்க்குகள் உறுப்பு தானத்தை அதிகரிக்க உதவும், என்று டாக்டர் குமார் கூறினார்.

தற்போது ஒரு உறுப்பு கிடைப்பது மருத்துவமனையால், மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புக்கு தெரிவிக்கப்படுகிறது, அது உள்ளூரில் பெறுநர்களுடன் பொருந்துகிறதா என்று பார்க்கப்படுகிறது;  பொருந்தவில்லை என்றால், அது பிராந்திய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புக்கும், பின்னர் NOTTOவுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது,.

ஒருவர் எப்படி தானம் செய்யலாம்?

பதிவுசெய்யப்பட்ட உறுப்பு தானம் செய்பவராக மாற, நீங்கள் NOTTO இணையதளத்தில் உறுதிமொழி எடுக்கலாம் அல்லது மனித உறுப்புகள் மாற்றுச் சட்டத்தின் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 7ஐ அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

பதிவுசெய்வதைத் தவிர, நன்கொடையாளர்கள் தங்கள் நம்பிக்கைகளை தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு விளக்குவது முக்கியம். ஏனென்றால், உங்களிடம் நன்கொடையாளர் அட்டை இருந்தாலும், தனிநபரின் மரணத்திற்குப் பிறகு உறுப்பு தானம் செய்வதற்கு குடும்பத்தின் சம்மதம் கேட்கப்படுகிறது. குடும்பம் மறுத்தால், உறுப்புகள் தானம் செய்யப்படாது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment