கொரோனா வைரஸ் பரவலைத் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோஷியல் டிஸ்டன்சிங், அதாவது தனி நபர் இடைவெளி உள்ளது. பொது அறிவியல் நூலகத்தால் வெளியிடப்பட்ட திறந்த அணுகல் விஞ்ஞான இதழான PLOS One-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 134 நாடுகளில் கோவிட் -19 பரவுவதைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் சமூக தொலைதூர நடவடிக்கைகளின் செயல்திறனை அளவிட ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்துள்ளனர். இந்த ஆய்வு ஜூலை 30 அன்று வெளியிடப்பட்டது.
ஆய்வு என்ன சொல்கிறது?
கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதில் தனி நபர் இடைவெளி நடவடிக்கைகளின் விளைவுகளை அளவிட ஆராய்ச்சியாளர்கள் முயன்றனர். இத்தகைய நடவடிக்கைகள் "சமூக தொலைதூரக் கொள்கைகளை செயல்படுத்தாத நாடுகளில் ஒப்பிடும்போது பரவல் விகிதங்களை கணிசமாகக் குறைத்தன" என்று அவர்கள் கண்டறிந்தனர்.
உதாரணமாக, சமூக தொலைதூர நடவடிக்கைகளை அமெரிக்க மாகாணங்கள் செயல்படுத்திய போது, கோவிட் -19 பரவுவதலை மிகச்சிறிய அளவில் கட்டுப்படுத்திய நெப்ராஸ்கா மற்றும் வயோமிங் மாகாணங்களில் எந்தவொரு சமூக தொலைதூர நடவடிக்கைகளும் இல்லாமல் இருந்தன.
தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் அதிக மாற்றம் இல்லை ஏன்?
ஆராய்ச்சியாளர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட 134 நாடுகளில், 74 நாடுகளில் எந்த சமூக தொலைதூரக் கொள்கைகளும் இல்லை, 14 நாடுகள் பிராந்திய சமூக தொலைதூரக் கொள்கைகளையும் 46 நாடுகள் ஒரு தேசிய சமூக தொலைதூரக் கொள்கையையும் செயல்படுத்தின.
பிராந்திய சமூக தொலைதூரக் கொள்கைகளைக் கொண்ட நாடுகளை விட, தேசிய சமூக தொலைதூரக் கொள்கை கொண்ட நாடுகள் கோவிட் -19 பரவல் விகிதம் பெரியளவில் குறைவதைக் கண்டன. பிராந்தியக் கொள்கைகள் உள்ள நாடுகளிலும், சமூக தொலைதூரக் கொள்கைகள் இல்லாத நாடுகளிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் காணப்படவில்லை.
அடிப்படையில், சமூக தொலைதூர நடவடிக்கைகளை அமல்படுத்திய 46 நாடுகளில், இந்த கொள்கை கோவிட் -19 பாதிப்புகளை 65 சதவீதத்திற்கும் குறைக்க வழிவகுத்தது அல்லது 1.57 மில்லியன் பாதிப்புகளை தடுத்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தேசிய சமூக தொலைதூர நடவடிக்கைகளைக் கொண்ட 46 நாடுகளில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஈரான், அயர்லாந்து, இத்தாலி, நியூசிலாந்து, யுஏஇ மற்றும் இங்கிலாந்து ஆகியவை ஆய்வு செய்த நாடுகளில் அடங்கும்.
பிராந்திய சமூக தொலைதூரக் கொள்கைகளைக் கொண்ட நாடுகளில் கனடா, பின்லாந்து, ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும்.
இந்த ஆய்வின் வரம்புகள் என்ன?
ஆய்வாளர்கள் தங்கள் பகுப்பாய்விற்காக நேரடி கோவிட் -19 பரிசோதனையை நம்பியிருந்ததால், அவர்கள் நோயின் பரவலை குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். மேலும், காலநிலை, மக்கள்தொகை அடர்த்தி, சுகாதார உள்கட்டமைப்பு, சோதனை விகிதங்கள் மற்றும் மக்கள்தொகை பண்புகள் போன்ற பல்வேறு காரணிகள் கோவிட் -19 இன் பரவலைத் தீர்மானிக்கும் அதே வேளையில், இந்த ஆய்வு சமூக தொலைதூரக் கொள்கைகளின் விளைவாக மட்டுமே பரவுவதில் ஏற்படும் மாற்றத்தை மையமாகக் கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 5 : நேருவின் லட்சியம் மீது விழுந்த மற்றொரு அடி!
இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள சமூக தொலைதூர நடவடிக்கைகள் யாவை?
இந்த பகுப்பாய்வில் இந்தியா சேர்க்கப்படவில்லை என்றாலும், இது தேசிய அளவிலான தனி நபர் இடைவெளி கொள்கையை செயல்படுத்துகிறது, மாநில அரசுகள் இதனை தீவிரமாக செயல்படுத்துகின்றன. Unlock-3 வழிகாட்டுதல்களின்படி, உள்துறை அமைச்சகம் இரவு நேரங்களில் தனிநபர்களின் நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகளை நீக்கி, ஆகஸ்ட் 5 முதல் யோகா நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.