/indian-express-tamil/media/media_files/2025/05/21/IuZ4IRGQ0ISZik0xKgj7.jpg)
முடவாட்டுக்கால் அல்லது முடவன் நாட்டுக்கால் என்று அழைக்கப்படும் ஒரு வகையான கிழங்கு வைத்து எப்படி சூப் செய்வது என்று கற்றது கையளவு யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். இது பலருக்குத் தெரியாத ஒரு கிழங்கு. ஏறத்தாழ 48 வகையான நோய்களைத் தீர்க்கும் குணாதிசயங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இந்த கிழங்கு தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது. இந்தக் கிழங்கு 48 வகையான நோய்களைத் தீர்க்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.
தேவையான பொருட்கள்:
முடவாட்டுக்கால்
நல்லெண்ணெய்
சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய்
மஞ்சள் பொடி
கிராம்பு
சோம்பு
பூண்டு
இஞ்சி
முழு மல்லி
முழு மிளகு
கல் உப்பு
செய்முறை:
சுத்தம் செய்த முடவாட்டுக்காலுடன் கிராம்பு, சோம்பு, உரித்த பூண்டு, இஞ்சி, முழு மல்லி மற்றும் முழு மிளகு சேர்த்து அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், மஞ்சள் பொடி சேர்க்கவும். அரைத்து வைத்துள்ள முடவாட்டுக்கால் கலவையைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். தேவையான அளவு தண்ணீர் மற்றும் கல்லுப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
சூப் நன்றாகக் கொதித்து பச்சை வாசனை நீங்கியதும் இறக்கி பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான சூப் ரெடி. விலை குறைவாக கிடைக்கும் இந்த கிழங்கை வாங்கி சூப் வைத்து குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.