காலை எழுந்ததும் இந்த ஜூஸ் ஒரு கிளாஸ்... நடிகர் சரத்குமார் இளமையின் ரகசியம் இது தானாம்: பிரதீப் ரங்கநாதன் ஓபன்!

இந்த ஒரு ஜூஸ் தான் சரத்குமாரின் இளமையின் ரகசியம் என்று பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அது என்ன ஜூஸ் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த ஒரு ஜூஸ் தான் சரத்குமாரின் இளமையின் ரகசியம் என்று பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அது என்ன ஜூஸ் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
beetroot

நம் அனைவருக்கும் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், 30 வயதை கடந்தாலே தோலில் சுருக்கங்கள் ஏற்பட தொடங்கிவிடும். இந்த சுருக்கங்களை குறைக்க நம் மக்கள் பல்வேறு கிரீம்களையும், சிகிச்சைகளையும் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இந்த சுருக்கங்களை ஒரு பீட்ரூட் ஜூஸினால் சரி செய்யலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

Advertisment

இயற்கையாக கடவுள் கொடுத்த ஒரு வரப்பிரசாதம் பீட்ரூட் தான். பீட்ரூட் ஜூஸை நாம் தினமும் காலையில் அருந்துவதன் மூலம் நம் தோல் சுருக்கங்கள் குறைகிறது. அதுமட்டுமல்லாமல், நம் ரத்தங்களும் சுத்தம் செய்யப்படுகின்றனர். பீட்ரூட் ஜூஸை குடித்துவிட்டு அதன் சக்கையை தூக்கி எறியாமல் நம் முகத்திற்கு பேஸ் பேக்காக பயன் படுத்தலாம். இதன் மூலம் நம் முகம் பொலிவுறும். அதுமட்டுமல்லாமல், பீட்ரூட் ஜூஸின் சக்கையை தலையில் ஹேர் பேக்காகவும் பயன்படுத்தலாம். இதன் மூலம் நம் முடி பளபளவென்று இருக்கும்.

பீட்ரூட் நன்மைகள்

பீட்ரூட்டின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதில் 'நைட்ரேட்டுகள் அதிக அளவில் உள்ளன. இந்த நைட்ரேட்டுகள் உடலுக்குள் சென்றவுடன் நைட்ரிக் ஆக்ஸைடாக மாற்றப்படுகின்றன. இந்த நைட்ரிக் ஆக்ஸைடு, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதன் விளைவாக, உயர் இரத்த அழுத்தம் கணிசமாகக் குறைவதாகவும், இது இதயம் சார்ந்த நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது.

பீட்ரூட்டில் நார்ச்சத்து (Fiber) அதிகமாக உள்ளது. இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுத்து, குடல் இயக்கத்தைச் சீராக்குவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைக்க நினைப்பவர்கள் பீட்ரூட் ஜூஸ், சாலட் என பீட்ரூட்டை பல வழிகளில் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்.

Advertisment
Advertisements

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிரதீப் ரங்கநாதன், சரத்குமாரின் இளமையின் காரணம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, ”சரத்குமார் சாரின் வயது என்னவாக இருக்கும் என்று தான் எனக்கு தோன்றியது. என்ன சார் சீக்ரெட் என்று கேட்கும் பொழுது காலையில் எழுந்ததும் ஒரு பீட்ரூட் ஜூஸ் குடிப்பேன் பிரதீப் என்றார். அன்று இருந்து இன்று வரை நான் பீட்ரூட் ஜூஸ் மட்டும் தான் குடித்துக் கொண்டிருக்கிறேன். அவர் வயது வரும் பொழுது நானும் இளமையாக இருந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்” என்றார்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: