குழந்தையின் உடல் எடையை அதிகப்படுத்த வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் முக்கியம் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
வாழைப்பழம் குறித்து அவர் பேசியிருப்பதாவது: “ குழந்தைகள் உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்றால் தினமும் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். வாழைப்பழத்தில் கால்சியம், பொட்டாசியம் போன்ற உப்புகள் இருக்கிறது. இன்னும் தெளிவாகச் சொன்னால் சரட்டோனியம் போன்ற சத்துக்கள் இருக்கிறது. அந்த அளவிற்கு வாழைப்பம் எளிமையான ஒரு கனியாக இருக்கும். வாழைப்பழத்தில் பலவகை இருக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியில் ஏலக்கி வகை பழம் உள்ளது. பெங்களூரு வாழை என்பது ஹைபிரிட் வாழை.
இதை நாங்கள் பரிதுரைப்பது இல்லை. அதில் இனிப்பு சத்துகள் மட்டுமே இருக்கிறது. இந்நிலையில் அந்தந்த ஊர்களுக்கு ஏற்றவாறு உள்ள பழ வகைகளில் சத்துக்கள் இருக்கிறது. திநெல்வேலி பகுதியில் நாட்டு வாழை என்று சொல்வார்கள். இந்த நாட்டு வாழையில் அதிக நார்சத்து இருக்கிறது. நாகர்கோவிலில், நேந்தர வாழை, செவ்வாழை, மட்டி பழம் கிடைக்கும். தென்காசி, பாபநாசம் பகுதியில் தேன் வாழை என்று அழைப்படும் பழம் கிடைக்கும். அது கோழிக்கோடு போல் இருக்கும். திருச்சியை சுற்றி நிறைய வாழைப்பழ வகைகள் இருக்கிறது. அதனால் வாழைப்பழம் குறித்த ஆய்வு மையம் அங்கே இருக்கிறது.
இளைஞர்கள் தற்போது சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக அஜீரணம் இருக்கிறது. மேல் வயிற்று வலி என்று கூறுவார்கள். மேல் வயிற்றில் வலி இருப்பதுபோல் தோன்றும். இதற்கு வாழைப்பழம் தீர்வாக இருக்கும். வாய்வுத் தொந்தரவு இருந்தால், கண்டிப்பாக வாழைப்பழம் சாப்பிட வேண்டும் . மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது, வாழைப்பழமும் சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள்.
நெஞ்சு எரிச்சல் இருக்கும் நபர்களும் இதை எடுத்துக்கொள்ளலாம். காலை 11 மணிக்கு, சாப்பிடுவதற்கு முன்பாக எடுத்துக்கொள்ளலாம். மாலை 4 மணி அல்லது 5 மணிக்கு வாழைப் பழம் எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து உழைக்க வேண்டி இருக்கிறது. ஆனால் முழுவதுமாக சாப்பிட முடியவில்லை என்றால் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளலாம். வயிற்றில் சுரக்கும் அமிலம், நாம் சாப்பிடவில்லை என்றால், குடல் பகுதி மற்றும் இரைப்பை பகுதியில் அமிலம் பட்டு புண்கள் ஏற்படும். இந்த புண்களை குணமாக்கும் குணம் வாழைப்பழத்தில் இருக்கிறது. சித்த மருத்துவத்தில், புண்களை ஆற்றுவதற்கு வாழைப்பழங்களை பயன்படுத்துகிறார்கள். வாழைப்பழம் இயல்பான உறக்கத்தை கொடுக்கும். இரவு 8.30 மணிக்கு நாம் தூங்கும் முன்னால் வாழைப்பழம் சாப்பிடலாம். மேலும் இதய நோயாளிகளுக்கு வாழைப்பழத்தில் உள்ள சோடியம், பொட்டாஷியம் உதவி செய்கிறது. 80 முதல் 85 வயதை சேர்ந்தவர்கள் இதயநோய்க்கு மருந்துகள் எடுத்துக்கொண்டிருப்பர்கள் அவர்கள் தினமும் வாழைப்பழம் எடுத்துகொள்ளலாம். சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இல்லாத போது, கண்டிப்பாக வாழைப்பழம் எடுத்துக்கொள்ள கூடாது. மாத்திரைகள், வாழ்க்கை முறை மூலமாக சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்போது வாழைப்பழத்தை சாப்பிடலாம்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“