/indian-express-tamil/media/media_files/2025/05/02/rEVQOOnpTavsPBULraWA.jpg)
தட்டை ரெசிபி, அரிசியை கழுவி காய வைத்து சிரமப்படாமல், மிக எளிதாக அதே சமயம் மொறுமொறுப்பான தட்டையை எப்படி செய்வது என்று 2மினிட்ஸ் செஃப் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். இந்தத் தட்டைகள் தயாரிப்பதற்கு எளிதானது மட்டுமல்லாமல், 10 நாட்கள் வரை சேமித்து வைத்து சுவைக்க முடியும். இந்த தீபாவளி பலகாரத்தை நீங்களும் முயற்சி செய்து பார்த்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
உப்பு
மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
வெண்ணெய்
வெள்ளை எள்
எண்ணெய்
செய்முறை:
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை கழுவி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக விடவும். சூடாக இருக்கும்போதே நன்கு மசித்து, பின்னர் ஆறவிடவும். ஆறிய மசித்த பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், வெண்ணெய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெள்ளை எள் மற்றும் 2 கப் அரிசி மாவு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
மாவை நன்றாக கலக்கவும். பருப்பில் உள்ள ஈரப்பதமே போதுமானது. தேவைப்பட்டால், சிறிது சிறிதாக தண்ணீரைத் தெளித்து, மாவை மென்மையாக பிசைந்து கொள்ளவும். மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, பாலிதீன் கவர் அல்லது வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி, அதன் மேல் வைத்து லேசாகத் தட்டவும். பிறகு, ஒரு முள் கரண்டியை (fork) வைத்து சிறிய துளைகளை உருவாக்கவும்.
இது எண்ணெயில் ஒண்ணு போல வெந்து, தட்டை மொறுமொறுப்பாக இருக்க உதவும். எண்ணெய் நன்கு சூடானதும், தட்டைகளைப் போட்டு மிதமான தீயில் வைத்து, திருப்பி விட்டு நிதானமாக வேக வைக்கவும். எண்ணெயின் கொதிப்பு அடங்கியதும் எடுத்தால், மொறுமொறுப்பான தட்டை தயார். இந்த தீபாவளிக்கு இந்த மாதிரி ஈஸியாக தட்டை செய்து பாருங்கள், நிஜமாக வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.