/indian-express-tamil/media/media_files/2025/05/06/VlL6vr6UBpfDD3oyMIn2.jpg)
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சரியான முறையில் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுவதாக மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
நார்ச்சத்து எடுத்துக் கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும், இன்ஃப்ளமேஷனை குறைக்கும் ஆற்றலும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நார்ச்சத்து உதவுகிறது என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், 100 கிராம் சிறுதானிய அரிசியில் 5 முதல் 6 கிராம் நார்ச்சத்து கிடைக்கிறது. ஒரு வாழைப்பழத்தில் 2 முதல் 3 கிராம் நார்ச்சத்து கிடைக்கிறது. ஆனால், ஒரு ஆண் சராசரியாக ஒரு நாளைக்கு 35 கிராம் நார்ச்சத்து எடுக்க வேண்டும் எனவும், ஒரு பெண் 25 கிராம் நார்ச்சத்து எடுக்க வேண்டும் எனவும் மருத்துவர் அருண் குமார் அறிவுறுத்துகிறார்.
அதனடிப்படையில், 100 கிராம் கேரட்டில் 2 முதல் 3 கிராமும், ஒரு கட்டு கீரையில் 4 முதல் 6 கிராமும் நார்ச்சத்து இருக்கிறது. இது தவிர ஒரு நாளைக்கு அனைவரும் குறைந்தபட்சமாக 400 முதல் 500 கிராம் வரை காய்கறி, கீரை வகைகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் அருண் குமார் வலியுறுத்துகிறார்.
இவற்றை காலை, மதியம் என்று பிரித்து சாப்பிடலாம். இவற்றில் இருந்து சராசரியாக 25 கிராம் நார்ச்சத்து கிடைத்து விடும் என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். எனவே, இந்த அளவிற்கு காய்கறிகளை சாப்பிடும் போது தான் நமக்கான முழு பலன் கிடைக்கும்.
நன்றி - Doctor Arunkumar Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.