மலச் சிக்கல், வாயுத் தொல்லை? இந்த டிரிங்க் மட்டும் போதும்: டாக்டர் கே.ஆர் அக்ஷயன்

இன்றைய சூழலில் பலருக்கும் இருக்கும் தீராத பிரச்சனைகளில் ஒன்று மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லை ஆகும். என்னதான் இந்த பிரச்சனையை சரிசெய்ய நிறைய மருந்துகளை எடுத்தாலும் சரியாகவில்லை என்று புலம்புபவர்களுக்கு டாக்டர் கே.ஆர் அக்ஷயன் டிப்ஸ் ஒன்றை கூறுகிறார்.

இன்றைய சூழலில் பலருக்கும் இருக்கும் தீராத பிரச்சனைகளில் ஒன்று மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லை ஆகும். என்னதான் இந்த பிரச்சனையை சரிசெய்ய நிறைய மருந்துகளை எடுத்தாலும் சரியாகவில்லை என்று புலம்புபவர்களுக்கு டாக்டர் கே.ஆர் அக்ஷயன் டிப்ஸ் ஒன்றை கூறுகிறார்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
Akshayan tips

டாக்டர் ஆர்.கே. அக்ஷயன் அவர்கள், பலருக்கும் பெரும் துன்பத்தைக் கொடுக்கும் செரிமானப் பிரச்சனைகளான மலச்சிக்கல் மற்றும் வாயுத் தொல்லைக்கான எளிய மற்றும் இயற்கையான வீட்டு வைத்தியம் குறித்து ஹெல்த்கஃபேதமிழ் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். 

Advertisment

நமது உடலில் வாயுத் தொல்லை ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், மலச்சிக்கல்தான். மலம் சரியாக வெளியேறாமல், உடலுக்குள் கழிவுகள் தேங்கும்போதுதான், அவை கெட்டுப்போய் தேவையற்ற காற்றை (வாயுவை) உருவாக்கி, வாயுத் தொல்லையாக மாறுகிறது. எனவே, வாயுத் தொல்லையை நீக்க, அதன் அடிப்படைக் காரணமான மலச்சிக்கலை முதலில் சரிசெய்ய வேண்டும் என்று டாக்டர் வலியுறுத்துகிறார்.

நிவாரணத்திற்கான டிரிங்க் (பானம்): இந்த இரண்டு பிரச்சனைகளையும் ஒரே நேரத்தில் சரிசெய்ய உதவும் ஒரு சக்திவாய்ந்த ஜூஸை டாக்டர் பரிந்துரைக்கிறார்.

தேவையான பொருட்கள்:

ஓமம் : நான்கு பங்கு
சீரகம்: நான்கு பங்கு
சுக்கு: ஒரு பங்கு

இந்த மூன்று பொருட்களையும் நன்கு பொடி செய்து (பவுடராக) எடுத்து, ஒன்றாகக் கலந்து ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு ஸ்பூன் அளவுள்ள இந்தக் கலவையை எடுத்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

Advertisment
Advertisements

ஒவ்வொரு வேளை சாப்பாட்டுக்குப் பின்னரும் இதை எடுத்துக்கொள்வது சிறந்தது. நாம் சாப்பிட்ட உணவு கழிவாக உடம்புக்குள் தேங்குவதைத் தடுக்க, உணவு உண்ட பின் இதை அருந்த வேண்டும் என டாக்டர் அறிவுறுத்துகிறார். இதனை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வதால உடம்புக்குள் தேங்கியிருக்கும் தேவையற்ற காற்றுக் கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்படும். அத்துடன், வாயு புதிதாக உருவாகாமல் தடுக்கப்படும்.

இது செரிமானத்தை நன்கு தூண்டி, உண்ட உணவு சரியாக செரிக்க உதவுகிறது. வாயுத் தொல்லைக்கு மூல காரணமான மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. இந்தக் கலவையில் இருக்கும் சுக்குக்கு, தேவையில்லாத கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றல் உண்டு. இது ஒரு சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது. தொடர்ந்து இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம், உடலில் உள்ள காற்றுக் கழிவுகள் அனைத்தும் நீங்கி, அதனால் வரக்கூடிய தலைவலி, அசௌகரியம் போன்ற அத்தனை பிரச்சனைகளும் வராமல் தடுக்கப்படும் என்று டாக்டர் கே.ஆர். அக்ஷயன் தெரிவிக்கிறார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Foods that helps to reduce gastric problems Best tips to avoid constipation

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: