காலை கடன் கலகலன்னு போக... இரவு இந்தப் பொடியில் கொஞ்சம் போதும்: சொல்லும் டாக்டர் சிவராமன்

மலச்சிக்கலுக்குத் தீர்வு காண, இரவு தூங்கச் செல்லும் முன் இயற்கையான மூலிகைப் பொடி ஒன்றைப் பயன்படுத்தலாம் என டாக்டர் சிவராமன் கூறியிருக்கிறார்.

மலச்சிக்கலுக்குத் தீர்வு காண, இரவு தூங்கச் செல்லும் முன் இயற்கையான மூலிகைப் பொடி ஒன்றைப் பயன்படுத்தலாம் என டாக்டர் சிவராமன் கூறியிருக்கிறார்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
SIvaraman tips

மலச்சிக்கல் என்பது இன்று பலரையும் வாட்டும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனை. காலைக் கடனை நிம்மதியாகவும், சுமுகமாகவும் கழிப்பதே ஆரோக்கியமான நாளுக்கான அடிப்படை என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த மலசிக்கல் பிரச்சனைக்கு பக்க விளைவுகள் இல்லாத, இயற்கையான முறையில் எவ்வாறு தீர்வு காணலாம் என்று பிரபல மருத்துவர் சிவராமன் தமிழ் ஸ்பீச் பாக்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

டாக்டர் சிவராமன் அவர்கள் மலச்சிக்கல் பிரச்சனைக்கு அவர் பரிந்துரைக்கும் அந்த மூலிகைப் பொடி திரிபலா பொடி ஆகும். மலச்சிக்கல் பிரச்சனைக்குத் தீர்வாக, இரவு தூங்குவதற்கு முன்பு அரை ஸ்பூன் திரிபலா பொடியை எடுத்துக்கொள்ளலாம். இதனைத் தொடர்ச்சியாக எடுத்து வரும்போது, மலத்தை எளிதாகக் கழிக்க முடியும் என்றும், இது நடுத்தர வயதினர் மற்றும் வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காலை கடன் நிம்மதியாகப் போக, இரவு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இயற்கை மூலிகைப் பொடியைச் சரியான முறையில் உட்கொண்டால் போதும் என்று டாக்டர் சிவராமன் பரிந்துரைக்கிறார். இந்தப் பொடியை இரவு தூங்குவதற்கு முன் எடுத்துக்கொள்வதன் மூலம், காலையில் மலம் எளிதாக வெளியேற உதவுகிறது. மருத்துவர் சிவராமன் அவர்கள் பரிந்துரைக்கும் இந்தத் தீர்வு இயற்கையானது என்பதால், இதன் மூலம் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் இருப்பதாக டாக்டர் சிவராமன் சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3.5 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்காதது மலசிக்கலுக்கு ஒரு முக்கியக் காரணமாகும். போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால், செரிமான மண்டலத்தில் உள்ள உணவு உலர்ந்து, கெட்டியாகி, வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். உணவில் போதுமான நார்ச்சத்து இல்லாதது குடல் இயக்கத்தை சீராக்காது. நார்ச்சத்து தண்ணீரை உறிஞ்சி, மலத்தை இலகுவாக்கி வெளியேற்ற உதவுகிறது.

Advertisment
Advertisements

மலச்சிக்கலில் இருந்து விடுபட, அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் பற்றி டாக்டர் சிவராமன் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். தினமும் 3.5 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உறுதி செய்தல் மிகவும் அவசியம். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது குடல் இயக்கத்தைச் சீராக்கி, மலத்தை வெளியேற்ற உதவுகிறது.  

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Easy home remedies to relieve from constipation Best tips to avoid constipation

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: