/indian-express-tamil/media/media_files/2025/07/20/corriander-rice-2025-07-20-19-23-05.jpg)
சுலபமாகவும், சத்தானதாகவும் அதே சமயம் அசத்தலான சுவையுடனும் ஒரு லஞ்ச் ரெசிபி வேண்டுமென்றால், இந்த கொத்தமல்லி சாதம் தான் சரியான தேர்வு. இதனை செய்ய அதிக நேரம் தேவையில்லை, குறிப்பாக சாதத்தை ஏற்கனவே சமைத்து வைத்திருந்தால், பத்து நிமிடங்களுக்குள் இதை செய்து முடித்துவிடலாம். இதன் மணமும், புளிப்பும் காரமும் கலந்த சுவையும் எல்லோரையும் கவர்ந்திழுக்கும். இதற்கு எதாவது ஒரு காய் பொறியலோடு சேர்த்து சாப்பிடலாம். இதனை எப்படி செய்வது என்று ட்ரடிஷனலி மாடர்ன் புட் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி இலைகள்
இஞ்சி
உப்பு
புளி
தேங்காய்த் துருவல்
சீரகம்
மிளகு
மஞ்சள் தூள்
பச்சை மிளகாய்
தண்ணீர்
நல்லெண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலைப்பருப்பு
வேர்க்கடலை
முந்திரி
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை
சாதம்
நெய்
செய்முறை:
தேவையான அளவு அரிசியை எடுத்து சாதம் வடித்து வைத்துக்கொள்ளவும். சாதம் மென்மையாக ஆனால் குழையாமல், அரிசி உதிரிஉதிரியாக தனித்தனியே இருக்குமாறு சமைக்கவும். சமைத்த சாதத்தை ஒரு அகலமான தட்டில் பரப்பி, அதன் மேல் சிறிதளவு நல்லெண்ணெய் தூவி, மெதுவாகக் கிளறி விடவும். சாதம் சற்றே ஆறட்டும்.
கொத்தமல்லி இலைகள், இஞ்சி, உப்பு, புளி, தேங்காய், சீரகம், மிளகு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். ஒரு அகலமான கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெயைச் சூடாக்கவும். கடுகு சேர்த்து வெடிக்க விடவும். அடுத்து, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரி, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
பருப்பு மற்றும் நட்ஸ் வகைகளின் நிறம் மாறி பொன்னிறமாகி, மணம் வரும்வரை நன்கு வறுக்கவும். இப்போது, அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி விழுதை தாளிப்புடன் சேர்க்கவும். மிதமானத் தீயில் வைத்து, 3–4 நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும். விழுதின் பச்சை வாசனை நீங்கி, எண்ணெய் தனியே பிரியத் தொடங்க வேண்டும்.
விழுது மிகவும் கெட்டியாக இருந்தால், 1-2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து லேசாக இளக்கிக் கொள்ளலாம். ஆற வைத்த சாதத்தை இந்தக் கொத்தமல்லி மசாலாவுடன் சேர்க்கவும். சாதம் முழுவதும் மசாலா சமமாகப் பரவும் வரை மெதுவாகக் கிளறவும். சாதம் உடையாமல் பார்த்துக்கொள்ளவும். இறுதியாக, 1 டீஸ்பூன் நெய்யை சாதத்தின் மீது தூவி, ஒரு முறை கிளறிவிட்டு, அடுப்பை அணைக்கவும். சுவையான, மணம் நிறைந்த கொத்தமல்லி சாதம் தயார். இதை அப்பளம் அல்லது பொறியலுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us