/indian-express-tamil/media/media_files/2025/11/02/dheena-2025-11-02-11-53-51.jpg)
காளான் பெப்பர் கிரேவி மிகவும் சுவையாகவும், மட்டன் கிரேவிக்கு ஈடாகவும் இருக்கும். இதனை எப்படி செய்வது என்று செஃப் தீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். சுவையான மற்றும் காரசாரமான காளான் பெப்பர் கிரேவி சாதம், சப்பாத்தி, பரோட்டா, இட்லி, தோசை என எதனுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
காளான்
வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
இஞ்சி விழுது
பூண்டு விழுது
மிளகு
சோம்பு
சீரகம்
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
தனியா தூள்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
முந்திரி விழுது
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
பிரியாணி இலை
சோம்பு
உப்பு
எண்ணெய்
செய்முறை:
காளானை நன்றாக சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் 4 மேசைக்கரண்டி மிளகு, 1 தேக்கரண்டி சீரகம், 1/2 தேக்கரண்டி சோம்பு ஆகியவற்றைச் சேர்த்துத் தனியாகத் தண்ணீர் விடாமல் பொடித்து வைத்துக் கொள்ளவும். இதுதான் கிரேவியின் முக்கியச் சுவை. ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, மற்றும் 1 தேக்கரண்டி சோம்பு சேர்த்துப் பொரிய விடவும். பிறகு கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், 3 தேக்கரண்டி இஞ்சி விழுது மற்றும் 3 தேக்கரண்டி பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். நறுக்கிய தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், மற்றும் 1 தேக்கரண்டி தனியா தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாகக் கிளறவும்.
இப்போது நறுக்கி வைத்திருக்கும் காளானைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். காளான் வதங்கும்போது அதிலிருந்து நீர் வெளியேறும். அந்த நீரில் காளான் பாதியளவு வேகட்டும். காளான் பாதியளவு வெந்த பிறகு, நாம் பொடித்து வைத்திருக்கும் மிளகு, சீரகம், சோம்புப் பொடியை (4 மேசைக் கரண்டி மிளகுப் பொடி) சேர்த்து நன்றாகக் கிளறவும். மிளகு மசாலாவின் காரம் மற்றும் வாசனை கிரேவிக்கு ஒரு தனித்துவமான சுவையைக் கொடுக்கும்.
கிரேவியின் பதம் (தடிமன்) தேவைப்பட்டால், நீங்கள் அரைத்து வைத்திருக்கும் முந்திரி விழுதுடன் சிறிது தண்ணீர் கலந்து கிரேவியுடன் சேர்த்து, ஒரு கொதி வரும் வரை வைக்கவும். இது கிரேவிக்குக் கூடுதல் சுவையையும், தடிமனையும் தரும். தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் சேர்த்து கிரேவியின் பதத்தை சரிசெய்து, மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் கொதிக்க விடவும். கிரேவி நன்கு கொதித்து, எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி இலைகள் தூவி அடுப்பை அணைக்கவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us