/indian-express-tamil/media/media_files/2025/10/29/thuvaiyal-2025-10-29-14-40-24.jpg)
கோழி என்றதும் நமக்கு முதலில் நியாபகம் வருவது பிரியாணி தான். அதை தவிர்த்து கோழிக் குழம்பு, கோழி வறுவல்,கோழி ரசம்,கோழி சூப், சிக்கன் 65 என உணவுகள் நினைவிற்கு வரும். பொதுவாக கோழியை வைத்து என்ன உணவு செய்தாலும் எல்லாவருக்கும் பிடிக்கும். ஆனால், கோழியை வைத்து துவையல் செய்து சாப்பிட்டு இருக்கமாட்டோம். என்னது கோழியை வைத்து துவையலா? என்று கேட்கத் தோன்றும். ஆனால், செய்து சாப்பிட்டல் சுவை சும்மா அல்லும். வெறும் ஐந்தே பொருளை வைத்து இடிச்ச கோழி துவையல் எப்படி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - தேவையான அளவு
பச்சை மிளகாய் - தேவையான அளவு
பூண்டு - 30 பல்
கறிவேப்பிலை - தேவையான அளவு
சிக்கன் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை சிறிதாக வெட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து இதே எண்ணெய்யில் காய்ந்த மிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த எல்லா பொருட்களையும் கையை வைத்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் கொஞ்சம் சிக்கன் போட்டு வதக்க வேண்டும். இதில், உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து சிக்கனில் இருந்து கறியை மட்டும் தனியாக பிரித்து எடுக்க வேண்டும். இதில் நாம் முன்பு மசித்து வைத்த மிளகாய் கலவையைச் சேர்த்து நன்கு மசித்து விட வேண்டும். இதனுடன் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக் கொண்டால் இடிச்ச கோழி துவையல் ரெடி. இந்த துவையலை தோசை, இட்லி, சாதம் என எல்லாவறுக்கும் காம்பினேஷனாக வைத்து சாப்பிடலாம். இந்த டிஸ்சை அடிச்சிக்க யாராலும் முடியாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us