மொறு மொறுன்னு கிரிஸ்பி தோசை... அரிசி, உளுந்து ஊற வைக்கும் போது இந்த 2 பொருள் சேருங்க!

ஊறவைத்த பின் மாவை அரைத்து, உப்பு சேர்த்து, கைகளால் கலக்கி 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் தோசை மொறுமொறுப்பாக சுவையாக இருக்கும்.

ஊறவைத்த பின் மாவை அரைத்து, உப்பு சேர்த்து, கைகளால் கலக்கி 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் தோசை மொறுமொறுப்பாக சுவையாக இருக்கும்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
pori dosa

கிரிஸ்பியான, மொறுமொறுப்பான தோசை சுடுவது என்பது ஒரு கலை. பொதுவாக, இட்லி அரிசி மற்றும் உளுத்தம்பருப்பை மட்டும் ஊறவைத்து மாவு அரைப்போம். ஆனால், நீங்கள் வழக்கத்தை விட கூடுதல் மொறுமொறுப்புடன் கூடிய தோசையைச் சுவைக்க வேண்டுமானால், அரிசி மற்றும் உளுந்துடன் வேறு இரண்டு பருப்பு வகைகளைச் சேர்க்க வேண்டும். அந்த இரண்டு ரகசியப் பொருட்களான கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு சேர்த்து மாவை அரைக்கும் போது, தோசை மாவு நன்றாகப் புளித்து, மிருதுவான மற்றும் கிரிஸ்பியான தோசைகளைத் தரும். இந்த ரகசிய ரெசிபியைப் பின்பற்றி, உங்கள் வீட்டிலும் சுவையான மொறுமொறு தோசையை சுட்டு மகிழுங்கள். இதனை எப்படி செய்வது என்று ஜக் கிச்சன் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்: 

இட்லி அரிசி - 4 கப்
உளுத்தம்பருப்பு - 1 கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
துவரம்பருப்பு- 2 டேபிள் ஸ்பூன்
அவுல் - 1/2 கப்
வெந்தயம் 
உப்பு 

செய்முறை:

முதலில், இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து, தண்ணீரில் நன்றாகக் கழுவவும். பின்னர், அதனுடன் அரை கப் அவுல் மற்றும் சிறிதளவு வெந்தயம் சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி சுமார் ஆறு மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். ஆறு மணி நேரத்திற்குப் பிறகு, ஊறிய பொருட்களை ஒரு மிக்ஸர் ஜாரில் மாற்றி, தோசை ஊற்றுவதற்கு ஏற்ற பதத்தில் மென்மையாக அரைத்து எடுக்கவும்.

Advertisment
Advertisements

அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து, உங்கள் கைகளால் நன்றாகக் கலக்கி விடவும். கையால் கலக்குவது மாவு நன்றாகப் புளிக்க உதவுகிறது. இந்த மாவை எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். எட்டு மணி நேரம் கழித்து மாவு அழகாக உப்பி, புளித்து வந்திருக்கும். புளித்த மாவை லேசாகக் கலக்கி, தேவையான அளவு மட்டும் தண்ணீர் சேர்த்து தோசை ஊற்றும் பதத்திற்கு கொண்டு வரவும். பின்னர், சூடான தவாவில் சிறிது தண்ணீர் தெளித்து, வெப்பநிலையைக் குறைத்து, மெல்லிய தோசையாக ஊற்றி எடுக்கவும். இந்தக் கூடுதல் பருப்புகள் உங்கள் தோசைக்கு அபாரமான சுவையையும், மிகச் சிறந்த மொறுமொறுப்பையும் கொடுக்கும். சுவையான கிரிஸ்பி தோசை தயார்.

Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: