/indian-express-tamil/media/media_files/2025/10/16/vadai-2025-10-16-15-35-28.jpg)
வடை என்றாலே டீக்கடை தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். டீ மாஸ்டர் போடும் நல்ல மொறு மொறு வடையுடன் ஒரு டீ குடித்தால் அந்த உணர்வே சொர்க்கம் மாதிரி இருக்கும். அதிலும், அந்த வடையும் சட்னியோ அல்லது சாம்பாரோ வைத்து சாப்பிடும் போது தேவாமிர்தம் மாதிரி இருக்கும். இப்படி வடை என்றாலே எல்லோரும் டீக்கடையை பார்த்துதான் ஓடுவார்கள்.
இதுவே நாம் வீட்டில் செய்யும் வடையை சாப்பிட சொன்னால் யாரும் அதை தொட்டு பார்ப்பதில்லை. இதற்கு காரணம் வடியில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் தான். அதுமட்டுமல்லாமல், மொறு மொறு என்று செய்யும் வடை வீட்டில் கர்சிஃப் ரேஞ்சில் இருக்கும். இதுனாலேயே பலரும் வீட்டில் வடை செய்தார்கள் அந்த பக்கம் கூட எட்டி பார்க்கமாட்டார்கள்.
இதனாலேயே பலர் வீட்டில் வடை செய்வதை தவிர்த்து வருகிறார்கள். மொறு மொறு வடை செய்ய முடியவில்லையே என ஏங்குவோர் இனி அதை பற்றி கவலைப்பட வேண்டாம். ஒரு பொருளை வைத்து மொறு மொறு வடை எப்படி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
நீங்கள் பொதுவாக வடைக்கு எப்படி உளுந்து ஊற வைப்பீர்கள்? தேவையான அளவு உளுந்தை எடுத்து தண்ணீர் ஊற்றி ஒரு குறிப்பிட்ட நேரம் வரை ஊற வைப்பீர்கள் அப்படி தானே. இப்படி செய்தால் வடை கர்சிஃப் போன்று தான் இருக்கும். அதற்கு பதிலாக, உளுந்து ஊற வைக்கும் பொழுது அதில் கொஞ்சம் துவரம் பருப்பு சேர்த்து ஊற வையுங்கள். அதன்பின்னர் அந்த உளுந்தை அரைத்து வடை செய்யுங்கள். நீங்கள் எப்போதும் எதிர்பார்க்காத வகையில் நீங்கள் செய்யும் வடை நல்ல மொறு மொறுனு டீக்கடை வடை போன்று இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், உளுந்தில் துவரம் பருப்பு சேர்க்கும் பொழு வடை அதிக அளவு எண்ணெய் குடிக்காது இதனால், நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இனிமேல் பண்டிகைக் காலங்களில் வடை செய்யும் பொழுது இந்த ஒரு டிப்ஸை யூஸ் பண்ணி வடை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் வடை பக்கமே திரும்பி பார்க்காதவர்கள் கூட எங்களும் வடை வேண்டும் என்று கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.