மாத்திரையே வேணாம்... செலவைக் குறைக்கும் இந்த ரசம் சாப்பிட்டு பாருங்க!

பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் ஜலதோஷம், இருமல் போன்ற உடல்நலக்குறைவுக்குச் சூடான சாதத்துடன் இதைச் சேர்த்துச் சாப்பிடுவது உடனடியாக நிவாரணம் அளிக்கும்.

பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் ஜலதோஷம், இருமல் போன்ற உடல்நலக்குறைவுக்குச் சூடான சாதத்துடன் இதைச் சேர்த்துச் சாப்பிடுவது உடனடியாக நிவாரணம் அளிக்கும்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
rasam

மிளகு, சீரகம், பூண்டு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சேர்க்கப்பட்டுச் செய்யப்படும் இந்த ரசம், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு ஒரு அற்புதமான இயற்கை மருந்தாகச் செயல்படுகிறது. மிகக் குறைந்த நேரத்தில், எளிய முறையில் தயாரிக்கக்கூடிய இந்தச் சூடான ரசம், சுவையில் மட்டுமின்றி ஆரோக்கியத்திலும் சிறந்து விளங்குகிறது. குறிப்பாகக் குழந்தைகளுக்குக்கூட மிகவும் பயனுள்ள உணவாக இது இருக்கும். சூடான சாதத்தில் நிறைய ரசம் ஊற்றிச் சாப்பிட்டால் உடலுக்கு உடனடியாகத் தெம்பு கிடைப்பதோடு, சளி பறந்துபோகும். இதனை எப்படி செய்வது என்று லீ குக் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள்:

மல்லி (தனியா) - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
மிளகு - சிறிதளவு
பூண்டு - சில பல்
காஞ்ச மிளகாய் - 2 முதல் 3
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு (வதக்க)
சின்ன வெங்காயம் - இடித்து வைத்தது (சிறிதளவு)
மஞ்சள்தூள் (மஞ்சள் பொடி) - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு (தாளிக்க)
காஞ்ச மிளகாய் - 2 (தாளிக்க)
கருவேப்பிலை - சிறிதளவு (தாளிக்க)
தண்ணீர் - தேவையான அளவு
மல்லி இலை

செய்முறை:

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் மல்லி, சீரகம், மிளகு, பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும். வதக்கிய பின், அதனை எடுத்து ஆறவைத்து, பின்னர் தண்ணீரின்றி ஒரு பேஸ்ட் போல அரைத்து எடுத்துக்கொள்ளவும். 

ரசம் வைக்கும் சட்டியிலோ அல்லது பாத்திரத்திலோ சிறிதளவு எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை, மற்றும் இரண்டு காய்ந்த மிளகாய்களைச் சேர்த்து நன்கு பொரிய விடவும். பின்னர், இடித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, அது நன்கு வதங்கி வரும்வரை இரண்டு நிமிடங்கள் வதக்கவும். வதங்கிய வெங்காயத்துடன் மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். அதன் பிறகு, நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா பேஸ்ட்டைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும்.

Advertisment
Advertisements

இந்த ரசம் கலவையை அடுப்பில் வைத்து, குறைந்தது பத்து நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். ரசம் நன்றாகக் கொதித்து அதன் சுவை இறங்கியதும், அடுப்பை அணைத்துவிடவும். இறுதியாக, பொடியாக நறுக்கிய மல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும். இந்தச் சூடான ரசத்தை சூடான சாதத்தில் ஊற்றிச் சாப்பிட்டால் சளி உடனடியாக நீங்கும்.

Cooking Tips Rasam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: