இருமல் வாட்டி வதைக்குதா? ஒரு தடவை இந்த ரசம் சாப்பிட்டு பாருங்க; ஓடிப் போயிடும்!

சளி இருமலை உடனடியாக குணப்படுத்த ஒரு ஈஸியான வீட்டுக்குறிப்பு என்னவென்று பார்ப்போமா? வெறும் ஒரு கப் ரசம் குடித்தால் போதும் சளி அடிச்சிட்டு போயிடும்.

சளி இருமலை உடனடியாக குணப்படுத்த ஒரு ஈஸியான வீட்டுக்குறிப்பு என்னவென்று பார்ப்போமா? வெறும் ஒரு கப் ரசம் குடித்தால் போதும் சளி அடிச்சிட்டு போயிடும்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
chicken rasam

கடும் குளிர் மற்றும் இருமலில் தவிக்கும் போது, மருந்துகளைத் தேடாமல் நம் சமையலறை வைத்தியங்களில் நம்பிக்கை வைப்பது வழக்கம். அத்தகைய ஓர் அருமருந்துதான் இடிச்ச கோழி ரசம். பாரம்பரிய முறைப்படி, புதிதாக இடித்த மசாலாக்களுடன் இதைத் தயாரிக்கும்போது, அதன் காரமும், கோழியின் சத்துக்களும் இருமலைப் போக்கி, உடலுக்கு உடனடி ஆற்றலையும் இதத்தையும் அளிக்கிறது. காய்ச்சல், சளி, மற்றும் இருமல் இருக்கும் போது இது ஒரு சிறந்த உணவாகவும் மருந்தாகவும் செயல்படும். இதனை எப்படி செய்வது என்று குக்வித் தமிழ் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:
 
கோழி எலும்புடன் (சதை அதிகம் இல்லாதது)    250 கிராம்
சின்ன வெங்காயம் (நறுக்கியது)    10
தக்காளி (நறுக்கியது)    1 சிறியது
மஞ்சள் தூள்    1/2 தேக்கரண்டி
தண்ணீர்    3-4 கப்
எண்ணெய்/நெய்    1 தேக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை 
கொத்தமல்லி     
உப்பு  
மிளகு    1 தேக்கரண்டி
சீரகம்    1 தேக்கரண்டி
பூண்டு பல்    6-8
இஞ்சி (சிறிய துண்டு)    1/2 அங்குலம்

 
செய்முறை:

முதலில், 'இடிக்க வேண்டிய பொருட்கள்' அனைத்தையும் சேர்த்து, மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அல்லது அம்மியில் இடித்து தனியே வைக்கவும். இதுதான் இந்த ரசத்தின் உயிர்நாடி. கோழிக் கறியை (எலும்புடன்) நன்கு கழுவி, அதை மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பைச் சேர்த்து 2 கப் தண்ணீருடன் குக்கரில் 3-4 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வேக வைத்த தண்ணீரை (கோழி சூப்) தனியே வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய்யை சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். இப்போது இடித்து வைத்திருக்கும் மிளகு-பூண்டு கலவையைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும்.

Advertisment
Advertisements

வேக வைத்த கோழியையும், அதிலிருந்து பிரித்து வைத்திருக்கும் சூப் தண்ணீரையும் இதில் ஊற்றவும். ரசத்தின் கெட்டித்தன்மையைப் பொறுத்து மேலும் 1-2 கப் தண்ணீர் சேர்க்கலாம். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். ரசம் நுரைத்து, ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். அதிகமாக கொதிக்க விட வேண்டாம். இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லி தழைகளைத் தூவி சூடாகப் பரிமாறவும். இந்த இடிச்ச கோழி ரசத்தை ஒரு கிண்ணம் முழுவதும் சூடாக அருந்துங்கள். அதன் காரம் தொண்டை வலியைப் போக்கி, சளி மற்றும் இருமலை ஓட வைப்பதை நீங்களே உணர்வீர்கள்.

Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: