/indian-express-tamil/media/media_files/2025/01/29/QAUQ8uKZUnyGM63ZotOk.jpg)
மல்லிகைப்பூ போல வெண்மையாகவும், பஞ்சு போல மிருதுவாகவும் இருக்கும் இட்லிக்கு ஈடு இணை எதுவுமில்லை. மிருதுவான இட்லியை செய்ய எப்படி மாவு அரைப்பது என்று ஃபூடிஸ் ரூப் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி: 4 கப்
உளுத்தம்பருப்பு (ஊறவைத்த): 1 கப்
வெந்தயம்: 1 தேக்கரண்டி
அவல் (அப்பம்): 1/2 கப்
உப்பு: 1.5 தேக்கரண்டி (மாவு புளித்த பிறகு சேர்க்க)
செய்முறை:
முதலில் 4 கப் இட்லி அரிசியை எடுத்து 4 முதல் 6 மணி நேரம் வரை நன்கு ஊற வைக்கவும். தனியாக 1 கப் உளுத்தம்பருப்புடன் 1 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து சுமார் 1 மணி நேரம் ஊற வைக்கவும். நீங்கள் நீண்ட நேரம் ஊற வைத்தால், மிருதுவான மாவுக்காக இதை ஃப்ரிட்ஜில் வைக்கலாம். அது இன்னும் சாஃப்ட் தன்மை கொடுக்கும்.
அரைப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன், 1/2 கப் அவலை மட்டும் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த பொருட்களை ஒவ்வொன்றாக, தனித்தனியாக, மென்மையாக அரைத்து எடுக்கவும். அரைத்த அனைத்து மாவுகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றாக எடுத்து, கைகளால் நன்கு கலந்து விட வேண்டும். கைகளால் கலப்பது இட்லியை மேலும் மிருதுவாக மாற்றும், எனவே நன்றாக கைகளால் மாவை அடிக்க வேண்டும். இந்தக் கலவையை இரவு முழுவதும் அல்லது 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
மாவு புளித்த பிறகு, 1.5 தேக்கரண்டி உப்பு சேர்த்து, மெதுவாக கலக்கவும். அதிக நேரம் கலக்காமல் இருப்பது அவசியம். இட்லி தட்டில் மாவை ஊற்றி, 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். இப்போது உங்கள் பஞ்சு போன்ற, மென்மையான இட்லி தயார். இட்லி சூடாக இருக்கும்போதே, பரிமாறலாம். சட்னி, சாம்பார், ஏன் ஊறுகாயுடன் கூட சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இந்த மாதிரி செய்தால் மல்லிகைப்பூ என்ற பேருக்கு ஏற்ற மாதிரியே இட்லி மல்லிகைப்பூ மாதிரி சாஃப்ட் ஆகவும் இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.