/indian-express-tamil/media/media_files/2025/10/24/appam-2025-10-24-10-21-33.jpg)
கந்தர் அப்பம் என்பது தமிழ்நாட்டின் செட்டிநாடு பகுதியில் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான ஒரு இனிப்பு வகையாகும். இது அரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகள், வெல்லம் மற்றும் தேங்காய் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் ஒரு சிறப்பு அப்பமாகும். கந்தர் அப்பம், முருகப்பெருமானுக்குப் படைக்கப்படும் பிரசாதங்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக கந்த சஷ்டி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற முக்கிய திருவிழாக் காலங்களில் இந்த அப்பத்தைச் செய்து முருகனுக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம். முருகனின் அருளைப் பெறவும், மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேறவும் இந்த நைவேத்தியம் முருகனுக்கு படைக்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது கந்த சஷ்டி விரதம் தொடங்கிய நிலையில் முருகனுக்கு படைக்கும் கந்தர் அப்பத்தை எப்படி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 3/4 கப்
வாழைப்பழம் - 1
தேங்காய் - 1/2 கப்
ஏலக்காய் - 2
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை மூன்று மணிநேரம் ஊற வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு காய்த்து எடுத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழம், தேங்காய், ஏலக்காய், ஊற வைத்த அரிசி, சர்க்கரை பாகு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த எடுத்த கலவையில் மீதி இருக்கும் சர்க்கரை பாகைச் சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு கொதித்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து இருபக்கமும் நன்கு பொறித்து எடுத்தால் சுவையான கந்தர் அப்பம் ரெடியாகிவிடும். சாதாரண எண்ணெய்க்கு பதிலாக நெய் அல்லது தேங்காய் எண்ணெய்யில் அப்பம் சுட்டு எடுத்தால் சுவை இன்னும் அருமையாக இருக்கும். சஷ்டி விரதம் அன்று இந்த கந்தர் அப்பத்தை முருகனுக்கு நைய்வேத்தியமாக படைத்து மனமுருக முருகனை வழிபடுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us