வீட்டுல காய்கறி காலி... பருப்பு இருந்தா போதும்; டேஸ்டி குழம்பு ரெடி!

வீட்டில் காய்கறிகள் இல்லாத நேரத்தில்கூட சுவையான ஒரு குழம்பை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். வெறும் பருப்பை வைத்து எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போம்.

வீட்டில் காய்கறிகள் இல்லாத நேரத்தில்கூட சுவையான ஒரு குழம்பை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். வெறும் பருப்பை வைத்து எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போம்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
sada

வீட்டில் அவசரமாக சமைக்க வேண்டிய சூழலிலோ அல்லது காய்கறிகள் இல்லாதபோதோ என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? கவலையே வேண்டாம்! மிகவும் குறைவான நேரத்தில், எளிய பொருட்களைக் கொண்டு, பாரம்பரியமான மற்றும் சுவையான 'உப்பு பருப்பு' குழம்பை நீங்களும் செய்யலாம். வழக்கமான சாம்பார் அல்லது குழம்புகளிலிருந்து மாறுபட்டு, பூண்டு, சீரகம் மற்றும் நெய்யின் மணத்துடன் கூடிய இந்த உப்பு பருப்பு உங்கள் உணவுக்கு ஒரு தனித்துவமான சுவையைக் கொடுக்கும். இதைச் செய்வதற்கு எந்தக் காய்கறிகளும் தேவையில்லை என்பதால், இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு எளிய சமையல் தீர்வாகும். சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும் இதனை எப்படி செய்வது என்று த்ரியாம்பிகா இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு     
விளக்கெண்ணெய்     
மஞ்சள்தூள்     
பூண்டுப் பற்கள் 
பச்சை மிளகாய் 
நெய் / எண்ணெய் 
சீரகம்     
பெருங்காயத்தூள் 
உப்பு     
கொத்தமல்லி இலை     

செய்முறை:

துவரம்பருப்பை நன்கு கழுவி, குக்கரில் ½ லிட்டர் தண்ணீர், 1 தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து மூடி வைக்கவும். ஆவி வந்தவுடன், வெயிட் போட்டு, அடுப்பைச் 'சிம்'மில் வைத்து, சரியாக 10 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்த பருப்பை மத்து வைத்து கடையத் தேவையில்லை; கரண்டி கொண்டு லேசாக மட்டும் மசித்துக் கொள்ளவும். 4-5 பூண்டுப் பற்கள் மற்றும் 1-2 பச்சை மிளகாயை எடுத்து, ஒன்றும் பாதியுமாக இடித்துத் தயாராக வைக்கவும்.

ஒரு சிறிய கடாயில் நெய்/எண்ணெய் ஊற்றி சூடாக்கி, 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்துப் பொரிய விடவும். பின்னர் இடித்த பூண்டு மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து லேசாக வதக்கவும். கடைசியாக, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும். (விரும்பினால் கறிவேப்பிலை சேர்க்கலாம்.) இந்தத் தாளிப்பை வேக வைத்த பருப்புடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

Advertisment
Advertisements

குழம்பு ஆறிய பின் கெட்டியாக வாய்ப்புள்ளதால், தாளித்த அதே கடாயில் சுமார் ½ முதல் ¾ டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதை நன்கு கொதிக்க வைத்து, பின்பு பருப்புடன் சேர்க்கவும். இது சரியான பதத்தில் குழம்பை வைத்திருக்க உதவும். குழம்புக்குத் தேவையான அளவு கல்லுப்பு (சுமார் அரை ஸ்பூன்) சேர்த்து நன்கு கலக்கவும். சூடாக இருப்பதால் உப்பு எளிதில் கரைந்துவிடும். இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி பரிமாறினால், சுவையான உப்பு பருப்பு சாதத்துடன் சாப்பிடத் தயாராக உள்ளது.

Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: