காரம் கம்மி; டேஸ்டி ஜாஸ்தி... சட்டுன்னு ஒரு குழம்பு; குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!

காரம் கம்மியாக சுவை ஜாஸ்தியாக சட்டுன்னு பொறிச்சு கொட்டுன பருப்பு குழம்பு எப்படி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

காரம் கம்மியாக சுவை ஜாஸ்தியாக சட்டுன்னு பொறிச்சு கொட்டுன பருப்பு குழம்பு எப்படி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
dall

தினமும் சமையல் அறையில் குழம்பு செய்யும் பொழுது சட்டென ஒரு குழம்பு வைத்துவிட்டு சமையல் அறையில் இருந்து வெளியே வரமாட்டோமா? என்று பலரும் நினைப்பார்கள். காலை, மாலை, இரவு என மூன்று நேரமும் சமையல் அறையில் இருக்கும் பொழுது எப்படா சமையலை முடித்துவிட்டு செல்வோம் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும்.

Advertisment

அதுவும் வீட்டில் குழந்தைகள் இருந்தால் கேட்கவே வேண்டாம். அவர்களுக்கு என்று தனியாக குழம்பு வைக்க வேண்டி இருக்கும். ஒரே குழம்பை எல்லோரும் சாப்பிடமாட்டார்களா என பல நாட்கள் எண்ணியிருப்போம். இனிமேல் குழம்பை பற்றி கவலைப்படுவதற்கு அவசியமே இருக்காது. இந்த ஒரே குழம்பை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அது என்ன குழம்பு என்றால் பொறிச்சு கொட்டுன பருப்பு குழம்பு. இந்த குழம்பை எப்படி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பருப்பு

தக்காளி

மஞ்சள் பொடி

கொத்தமல்லி

சீரகம்

கடு 

பூண்டு 

கறிவேப்பிலை

காய்ந்த மிளகாய்

வெங்காயம்

புளி

பெருங்காயம்

செய்முறை

குக்கரி பருப்பு, தக்காளி மற்றும் மஞ்சள் பொடியைச் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, சீரகம் போட்டு பொடித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொறியவிடவும். கடுகு பொறிந்ததும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

இதனுடன், அரைத்து வைத்த கொத்தமல்லி பொடி மற்றும் ஊற வைத்த புளி சேர்த்து கொதிக்க விடவும். புளி பச்சை மணம் போகும் வரை கொதிக்க வேண்டும். புளி கொதித்ததும் வேக வைத்த பருப்பு, தக்காளியை நல்ல மசித்து இந்த கலவையில் சேர்த்து கொதிக்கவிடவும். கடைசியாக உப்பு போட்டு இறக்கினால் பொறிச்சு கொட்டுன பருப்பு குழம்பு ரெடியாகிவிடும். இந்த குழம்பு செய்யும் பொழுது வெங்காயத்தை ரொம்ப நேரம் வதக்க வேண்டிய அவசியம் இல்லை. 

Advertisment
Advertisements

சாப்பிடும் பொழுது வெங்காயம் வாயில் கிடைத்தால் தான் சுவையாக இருக்கும். இந்த குழம்பில் காரம் கம்மியாக இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் குழம்பு வைத்ததும் பட்டுனு காலி ஆகிவிடும். பொறிச்சு கொட்டுன பருப்பு குழம்பை உங்கள் வீட்டில் செய்து பார்த்து உணவை ருசித்து சாப்பிடுங்கள்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: