வாயில வச்சா வழுக்கிட்டு போகும்... நவராத்திரிக்கு இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்க!

இந்த நவராத்திரிக்கும் எல்லோருக்கும் பிடித்த மாதிரி ரிச்சான ஒரு சுவையில் எப்படி செய்வது என்று பார்ப்போம். இதை செய்ய வெறும் 4 பொருட்கள் போதும்.

இந்த நவராத்திரிக்கும் எல்லோருக்கும் பிடித்த மாதிரி ரிச்சான ஒரு சுவையில் எப்படி செய்வது என்று பார்ப்போம். இதை செய்ய வெறும் 4 பொருட்கள் போதும்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
halwa

நவராத்திரி கொண்டாட்டங்களின் போது, பலகாரங்கள் தயாரிப்பது என்பது ஒரு முக்கியமான பாரம்பரியம். வீட்டிலேயே எளிமையாகவும் சுவையாகவும் செய்யக்கூடிய ஒரு இனிப்புப் பலகாரத்தை எப்படி செய்வது என்று ரேகாஸ்குசினா இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். வாயில் வைத்ததும் அப்படியே வழுக்கிச் செல்லும் சுவை கொண்ட இந்த இனிப்பு, அனைவரையும் கவர்வது நிச்சயம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

கருப்பட்டி
நெய்
கோதுமை
முந்திரி
பாதாம்

செய்முறை: 

இந்த இனிப்பு செய்ய நமக்குத் தேவையான முக்கிய பொருட்கள் கருப்பட்டி, கோதுமை மாவு, நெய், மற்றும் முந்திரி பாதாம். முதலில், கருப்பட்டியை இடித்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள தூசுகள் நீங்கி, இனிப்பு மிகவும் சுத்தமாக இருக்கும்.

அடுத்ததாக, அடுப்பில் ஒரு கடாயை வைத்து, சிறிது நெய் சேர்க்கவும். நெய் உருகியதும், அதில் முந்திரி மற்றும் பாதாம் துண்டுகளைச் சேர்த்து, பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இது பலகாரத்திற்கு ஒரு அருமையான சுவையையும், மொறுமொறுப்பையும் கொடுக்கும். இப்போது அதே கடாயில் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து, கோதுமை மாவை அதில் கொட்டி நன்கு வறுக்க வேண்டும். மாவு நல்ல வாசம் வரும் வரை வறுப்பது அவசியம். கோதுமை மாவு கருகிவிடாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

மாவு நன்கு வறுபட்டதும், ஏற்கனவே கரைத்து வடிகட்டி வைத்திருந்த கருப்பட்டி கரைசலை இதில் மெதுவாகச் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை கட்டி தட்டாமல் நன்கு கலக்க வேண்டும். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து, கலவையை நன்கு கிளறவும். மாவும், கருப்பட்டியும் ஒன்று சேர்ந்து, ஒரு மென்மையான பதம் வரும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

கலவை கெட்டியாகி, கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும் சமயத்தில், வறுத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் பாதாம் துண்டுகளை இதில் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்கு கலந்து, சில நிமிடங்கள் வதக்கிய பின் அடுப்பை அணைத்து விடலாம். இந்த இனிப்புச் சுவை, அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையில் இருக்கும். நவராத்திரிக்கு இந்த எளிமையான மற்றும் சுவையான ரெசிபியை முயற்சி செய்து, கொண்டாட்டங்களை மேலும் இனிமையாக்குங்கள்.

Navaraththiri Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: