/indian-express-tamil/media/media_files/2025/10/23/payasam-2025-10-23-16-14-14.jpg)
தென் இந்திய பாரம்பரிய இனிப்பு வகைகளில் பால் பாயசத்திற்கு என்றுமே தனிச் சிறப்பு உண்டு. பால், அரிசி, பருப்பு, சேமியா, வெல்லம் ஆகியவை மென்மையாகக் கலந்து, ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவற்றின் நறுமணத்துடன் சமைக்கப்படும் இந்த இனிப்பு, நம் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
விழாக்கள், பண்டிகைகள், திருமணங்கள் மற்றும் வீட்டில் நடக்கும் எந்தவொரு சுப நிகழ்ச்சியிலும் உணவின் முடிவில் பரிமாறப்படும் இந்த பாயாசம், அன்பின் அடையாளமாகவும், நிறைவான மகிழ்ச்சியின் சுவையாகவும் விளங்குகிறது. பாயாசத்தில் பல வகைகள் உண்டு. சேமியா பாயாசம், அரிசி பால் பாயாசம், பருப்பு பாயாசம், பலா பாயாசம், ஜவ்வரிசி பாயாசம் என பல வகைகள் உண்டு.
இந்நிலையில், இயக்குநர் சுந்தர்.சி தன் மனைவி குஷ்பு சமைப்பதில் தனக்கு பாயாசம் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். அவர் பாயசம் அருமையாக செய்வார் என்றும் திரைத்துறையில் நடிகை குஷ்புவின் பாயாசத்திற்கு பல ரசிகர்கள் இருப்பதாகவும் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த பாயாசத்தை எப்படி சுவையாகவும் ஈஸியாகவும் செய்யலாம் என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு
வெல்லம்
ஏலக்காய்
பால்
நெய்
முந்திரி
தேங்காய்
செய்முறை
ஒரு கடாயில் பாசி பருப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர், வறுத்த இந்த பருப்பை ஒரு குக்கரில் போட்டு வேக வைக்க வேண்டும். பருப்பு வெந்ததும் நன்றாக கரண்டியை வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும். இதில் இனிப்பிற்கு ஏற்றபடி தேவையான அளவு வெல்லத்தை சேர்க்க வேண்டும். பின்னர் வாசனைக்காக ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
இதில் பாலை ஊற்றி கொதிக்க விட வேண்டும். பால் வாசனை போனதும் சிறிதளவு நெய்யில் தேங்காய், முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து பாயாசத்தில் கொட்டினால் பருப்பு பாயாசம் ரெடி. இந்த பாயாசத்தை சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு கிளாசில் ஊற்றி குடித்தால் சுவை சூப்பராக இருக்கும். பாயாசம் இன்னும் வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us