/indian-express-tamil/media/media_files/SsAuSGGg6XEyaNnbfTIF.jpg)
நேரம் இல்லை என்று கவலைப்பட வேண்டாம்! புளிக்க வைக்கத் தேவையில்லாத, உடனடி மொறுமொறுப்பான, சத்து நிறைந்த பாசிப்பருப்பு தோசையுடன் காரசாரமான வெங்காயச் சட்னி எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். இதனை எப்படி செய்வது என்று நான்ஃபிக்ஷன் ஸ்ட்ரீமிங் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு 1 கப்
பூண்டு 5 பல்
இஞ்சி 1 துண்டு
பச்சை மிளகாய் 2
கருவேப்பிலை
சீரகம்
மஞ்சள்தூள்
உப்பு
செய்முறை:
பாசிப்பருப்பை 3-4 மணி நேரம் அல்லது குறைந்தபட்சம் 1 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறவைத்த பாசிப்பருப்புடன், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் (பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, சீரகம், மஞ்சள்தூள், உப்பு) சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்திற்கு (ரவை மாவை விட சற்று மென்மையாக) மிக்ஸியில் அரைக்கவும். தோசைக் கல்லை சூடாக்கவும்.
கல்லில் ஒரு கரண்டி மாவை ஊற்றி, மெல்லிய தோசையாக சுற்றவும். சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு, பொன்னிறமாக, மொறுமொறுப்பாகும் வரை வேக வைத்து எடுக்கவும்.
காரச்சட்னிக்கு தேவையான பொருட்கள்:
எண்ணெய் 1 டீஸ்பூன்
கடலை பருப்பு
உளுத்தம்பருப்பு
வெங்காயம்
பூண்டு
வரமிளகாய்
புளி
கருவேப்பிலை
உப்பு
செய்முறை:
ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி போல நிறம் மாறும் வரை நன்றாக வதக்கவும். வதக்கிய கலவையை ஆற வைக்கவும். ஆறிய பின்னர், வதக்கிய கலவையுடன் புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு சட்னி பதத்தில் மிக்ஸியில் அரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கலாம். இந்த உடனடி தோசை மற்றும் காரச் சட்னி காம்பினேஷன் ஒரு சத்தான, விரைவான, மற்றும் சுவையானகாலை/இரவு உணவுத் தேர்வாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us